முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவ காரணங்களுக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. 

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர்  சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த புதன்கிழமை குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார். 

இதையடுத்து மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து