முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Senthil-Balaji 2023-04-13

Source: provided

சென்னை : தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து