முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலை தூய்மை செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 12-ம் தேதி (செவ்வாய்) நடைபெற உள்ளது.

அன்று அதிகாலை பூஜைகளுக்குபின் காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். 

இதனால் அன்று சுமார் 5 மணி நேரம் வரை பக்தர்கள் இலவச தரிசனம் உள்பட அனைத்து தரிசனமும் நிறுத்தப்படும். இதையடுத்து 11 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து