எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
செஞ்சூரியன் : செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 164 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா. இதில் தென் ஆப்பிரிக்கா 416 ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலியா 252 ரன்களுக்கு 34.5 ஓவர்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக் கிளாசன் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 174 ரன்களை விளாசித்தள்ளினார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்களை நொறுக்கினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இப்போது 2-2 என்று சமநிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் 92 பந்துகளில் 222 ரன்களைச் சேர்த்தனர். இதில் பயங்கரம் என்னவெனில் 25 ஓவர்களில் 120/2 என்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஹென்றிக் கிளாசனின், டேவிட் மில்லர் வெறியாட்டத்தில் கடைசி 25 ஓவர்களில் 296 ரன்கள் அதாவது கடைசி 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் பக்கம் விளாசியது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஒரு ‘நைட் மேர்’ அனுபவம்.
5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி கபில்தேவ் தான் 1983 உலகக்கோப்பையில் 175 ரன்களை விளாசி சாதனையைப் படைத்திருந்தார். நல்ல வேளை அந்தச் சாதனையை கிளாசன் முறியடிக்கவில்லை. 5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி இந்த சாத்து சாத்தியது தற்போது இரண்டாவது சாதனையாக மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவிடம் இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள் என 5 போட்டிகளில் தொடர் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா வீறு கொண்டு எழுந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக்கி விட்டது.
கிளாசன் - டேவி மில்லர் கூட்டணி 222 ரன்களை ஓவருக்கு 14.47 என்ற ரன் விகிதத்தில் எடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த 200 ரன்கள் கூட்டணியும் செய்யாத தலையாய ரன் விகித சாதனையாகும். அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் 173 ரன்களை இருவரும் குவித்தது உலக சாதனையாகும். ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜோஷ் ஹேசில்வுட் 10 ஓவர் 79 ரன்கள், ஆடம் ஜாம்ப்பா 10 ஓவர்களில் 113 ரன்கள் என்று பவுலிங்கில் சதம் கண்டார். ஆடம் ஜாம்ப்பா மட்டுமே 8 பவுண்டரிகள் 9 சிக்சர்களை கொடுத்தார். 38 பந்துகளில் அரைசதம் கண்ட ஹென்றிக் கிளாசன் அடுத்த 19 பந்துகளில் சதம் கண்டார். இதில் ஸ்டாய்னிஸை ஒரே ஓவரில் 3 பெரிய சிக்சர்கள் விளாசினார். அடுத்த 26 பந்துகளில் 74 ரன்கள் என்று பொங்கி எழுந்தார். முறியடிக்கப்பட்ட சாதனைகள்:
5-ம் நிலை அல்லது அதற்கும் கீழே இறங்கும் டவுன் ஆர்டரில் 174 ரன்கள் என்பது இரண்டாவது சாதனை. முதல் சாதனை இன்னும் நம் கபில்தேவின் 175 ரன்களிடத்தில்தான் உள்ளது.
25 ஓவர்களுக்குப் பிறகு இறங்கி 174 ரன்களை ஒரு தனிப்பட்ட வீரர் அடிப்பது இதுவே முதல்முறை. ஆகவே இதுவும் ஒரு உலக சாதனை. முன்பு ஏ.பி.டிவில்லியர்ஸ் 162 ரன்களை எடுத்துள்ளார். ஜாஸ்பட்லர் நெதர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ளார். ஆனால் கிளாசன் அவற்றை இப்போது முறியடித்து புதிய கொடிநாட்டியுள்ளார்.
14.47 என்ற ரன் ரேட்டில் 200 ரன்களுக்கும் மேலான பார்ட்னர் ஷிப். ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லரின் புதிய உலக சாதனை, இதற்கு முன்பாக ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் சேர்ந்து ஓவருக்கு 10.03 என்ற ரன் ரேட்டில் 204 ரன்களைச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஆடம் ஜாம்ப்பா வாரி வழங்கிய 113 ரன்கள் புதிய ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையாகும். புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியான 434-438 ஸ்கோர் போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர் மிக் லூயிஸ் 113 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
41-வது ஓவர் முதல் 50-வது ஓவர் வரை 174 ரன்கள் குவிப்பு. இது ஒரு புதிய உலக சாதனை. இதற்கு முன்னர் இங்கிலாந்து எடுத்த 164 ரன்களே சாதனையாக இருந்தது.
கிளாசன் 77 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். 2015 உலகக்கோப்பையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். ஹென்றிக் கிளாசனின் ஸ்கோர் 2வது சிறந்த ஒருநாள் 150 ஆகும்.
5-வது அல்லது அதற்கும் கீழான பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முதலாக நடக்கிறது. ஒட்டு மொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது விக்கெட்டுக்கான 5-வது உயர்தர பார்ட்னர்ஷிப் ஆகும். ஜேபி டுமினியும், மில்லரும் 2015-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 256 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு அடுத்து இந்த 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் சிறந்தது.
தென் ஆப்பிரிக்கா அடித்த 20 சிக்சர்கள், 2015-ல் மும்பையில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்த போது அடித்த 20 சிக்சர்களுடன் சமன் ஆன சாதனையாகும். 2018-ல் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு நாட்டிங்காம் ஒரு நாள் போட்டியில் 21 சிக்சர்களை வழங்கியது. 20 சிக்சர்கள் இரண்டாவது பெரிய சாத்துப்படியாகும்.
இந்தியாவில்தான் இதுவரை 6 முறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா எடுத்த 416 ரன்களுடன் தென் ஆப்பிரிக்க மண்ணில் 7வது 400+ ஸ்கோர் ஆக அமைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 6 days 6 hours ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 days ago |
-
ரூ. 1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
01 Dec 2023சென்னை : ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட
-
சென்னையில் இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
01 Dec 2023சென்னை : இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளி துபாயில் கைது
01 Dec 2023சென்னை, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காஷ்மீரில் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
01 Dec 2023ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து கருத்து கேட்ட டெல்லி அமைச்சர்
01 Dec 2023புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என வீடு வீடாக மக்களிடம் ஆம் ஆத்ம
-
தொடர் மழையால் தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின
01 Dec 2023சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகளில் 1,500 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
31 கைதிகள் விடுதலைக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
01 Dec 2023சென்னை : 31 கைதிகள் விடுதலைக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
மசோதா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
01 Dec 2023புதுடெல்லி, சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 'கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.
-
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
01 Dec 2023மதுரை, விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்?
-
மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்: நடிகை திரிஷா
01 Dec 2023சென்னை : மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அளித்த விளக்க கடிதத்தில் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார
-
வலுப்பெறும் 'மிக்ஜம்' புயல் வரும் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்
01 Dec 2023சென்னை, வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜம் புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு
-
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பதிவு கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது
01 Dec 2023சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு
01 Dec 2023புதுடெல்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங
-
கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாட்டோம்: சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கில் பொது தீட்சிதர்கள் உறுதி
01 Dec 2023சென்னை : சிதம்பரம் கோவில் கட்டுமானம் தொடர்பான வழக்கு - பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில்
-
தேசிய வருவாய் வழி தேர்வு: டிசம்பர் 4 முதல் விண்ணப்பம்
01 Dec 2023சென்னை : தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 4 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
-
தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
01 Dec 2023சென்னை : சென்னை தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கி
-
புயல் எச்சரிக்கையால் முதல்வர் ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைப்பு
01 Dec 2023சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படு
-
மற்ற நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது: பிரதமர் மோடி
01 Dec 2023துபாய் : இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது என்றும், இது சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியீடு மிக குறைவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்த
-
மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.18.85 கோடி கொள்ளை
01 Dec 2023உக்ருல் : மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் : ஏழுமலையான் காப்பாற்றுவார் என பேட்டி
01 Dec 2023திருப்பதி : திருப்பதி கோவிலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார்.
-
3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
01 Dec 2023சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி ரெட் அலர்ட்
01 Dec 2023சென்னை : திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் விநியோகம்
01 Dec 2023சென்னை : சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் நேற்று முதல் விநியோகப்பட்டது.
-
3,500 பேர் பயனடைவர்: சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு அறிவிப்பு
01 Dec 2023சென்னை, சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்
01 Dec 2023டெல் அவிவ் : காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.