எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
செஞ்சூரியன் : செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 164 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா. இதில் தென் ஆப்பிரிக்கா 416 ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலியா 252 ரன்களுக்கு 34.5 ஓவர்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக் கிளாசன் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 174 ரன்களை விளாசித்தள்ளினார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்களை நொறுக்கினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இப்போது 2-2 என்று சமநிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் 92 பந்துகளில் 222 ரன்களைச் சேர்த்தனர். இதில் பயங்கரம் என்னவெனில் 25 ஓவர்களில் 120/2 என்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஹென்றிக் கிளாசனின், டேவிட் மில்லர் வெறியாட்டத்தில் கடைசி 25 ஓவர்களில் 296 ரன்கள் அதாவது கடைசி 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் பக்கம் விளாசியது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஒரு ‘நைட் மேர்’ அனுபவம்.
5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி கபில்தேவ் தான் 1983 உலகக்கோப்பையில் 175 ரன்களை விளாசி சாதனையைப் படைத்திருந்தார். நல்ல வேளை அந்தச் சாதனையை கிளாசன் முறியடிக்கவில்லை. 5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி இந்த சாத்து சாத்தியது தற்போது இரண்டாவது சாதனையாக மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவிடம் இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள் என 5 போட்டிகளில் தொடர் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா வீறு கொண்டு எழுந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக்கி விட்டது.
கிளாசன் - டேவி மில்லர் கூட்டணி 222 ரன்களை ஓவருக்கு 14.47 என்ற ரன் விகிதத்தில் எடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த 200 ரன்கள் கூட்டணியும் செய்யாத தலையாய ரன் விகித சாதனையாகும். அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் 173 ரன்களை இருவரும் குவித்தது உலக சாதனையாகும். ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜோஷ் ஹேசில்வுட் 10 ஓவர் 79 ரன்கள், ஆடம் ஜாம்ப்பா 10 ஓவர்களில் 113 ரன்கள் என்று பவுலிங்கில் சதம் கண்டார். ஆடம் ஜாம்ப்பா மட்டுமே 8 பவுண்டரிகள் 9 சிக்சர்களை கொடுத்தார். 38 பந்துகளில் அரைசதம் கண்ட ஹென்றிக் கிளாசன் அடுத்த 19 பந்துகளில் சதம் கண்டார். இதில் ஸ்டாய்னிஸை ஒரே ஓவரில் 3 பெரிய சிக்சர்கள் விளாசினார். அடுத்த 26 பந்துகளில் 74 ரன்கள் என்று பொங்கி எழுந்தார். முறியடிக்கப்பட்ட சாதனைகள்:
5-ம் நிலை அல்லது அதற்கும் கீழே இறங்கும் டவுன் ஆர்டரில் 174 ரன்கள் என்பது இரண்டாவது சாதனை. முதல் சாதனை இன்னும் நம் கபில்தேவின் 175 ரன்களிடத்தில்தான் உள்ளது.
25 ஓவர்களுக்குப் பிறகு இறங்கி 174 ரன்களை ஒரு தனிப்பட்ட வீரர் அடிப்பது இதுவே முதல்முறை. ஆகவே இதுவும் ஒரு உலக சாதனை. முன்பு ஏ.பி.டிவில்லியர்ஸ் 162 ரன்களை எடுத்துள்ளார். ஜாஸ்பட்லர் நெதர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ளார். ஆனால் கிளாசன் அவற்றை இப்போது முறியடித்து புதிய கொடிநாட்டியுள்ளார்.
14.47 என்ற ரன் ரேட்டில் 200 ரன்களுக்கும் மேலான பார்ட்னர் ஷிப். ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லரின் புதிய உலக சாதனை, இதற்கு முன்பாக ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் சேர்ந்து ஓவருக்கு 10.03 என்ற ரன் ரேட்டில் 204 ரன்களைச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஆடம் ஜாம்ப்பா வாரி வழங்கிய 113 ரன்கள் புதிய ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையாகும். புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியான 434-438 ஸ்கோர் போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர் மிக் லூயிஸ் 113 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
41-வது ஓவர் முதல் 50-வது ஓவர் வரை 174 ரன்கள் குவிப்பு. இது ஒரு புதிய உலக சாதனை. இதற்கு முன்னர் இங்கிலாந்து எடுத்த 164 ரன்களே சாதனையாக இருந்தது.
கிளாசன் 77 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். 2015 உலகக்கோப்பையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். ஹென்றிக் கிளாசனின் ஸ்கோர் 2வது சிறந்த ஒருநாள் 150 ஆகும்.
5-வது அல்லது அதற்கும் கீழான பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முதலாக நடக்கிறது. ஒட்டு மொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது விக்கெட்டுக்கான 5-வது உயர்தர பார்ட்னர்ஷிப் ஆகும். ஜேபி டுமினியும், மில்லரும் 2015-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 256 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு அடுத்து இந்த 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் சிறந்தது.
தென் ஆப்பிரிக்கா அடித்த 20 சிக்சர்கள், 2015-ல் மும்பையில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்த போது அடித்த 20 சிக்சர்களுடன் சமன் ஆன சாதனையாகும். 2018-ல் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு நாட்டிங்காம் ஒரு நாள் போட்டியில் 21 சிக்சர்களை வழங்கியது. 20 சிக்சர்கள் இரண்டாவது பெரிய சாத்துப்படியாகும்.
இந்தியாவில்தான் இதுவரை 6 முறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா எடுத்த 416 ரன்களுடன் தென் ஆப்பிரிக்க மண்ணில் 7வது 400+ ஸ்கோர் ஆக அமைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட்![]() 2 days 18 hours ago |
பன்னீர் மஞ்சூரியன்![]() 5 days 18 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 1 week 2 days ago |
-
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு : 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை
02 Oct 2023சென்னை : தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-10-2023
02 Oct 2023 -
ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் தகவல்
02 Oct 2023புவனேஸ்வர் : ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஸ்லோவாக்கியா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் மாஜி அதிபர்
02 Oct 2023பிராடிஸ்லாவா : கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்று
-
சந்திரமுகி-2 விமர்சனம்
02 Oct 2023ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கியிருக்கும் படம் சந்திரமுகி 2.
-
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு
02 Oct 2023சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
மணிப்பூரில் மாணவர்கள் கொலை: 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
02 Oct 2023இம்பால் : மணிப்பூரில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
காந்தி ஜெயந்தி: சென்னையில் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
02 Oct 2023சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ
-
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2023சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.
-
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
02 Oct 2023சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வாழ்வு தொடங்குமிடம் நீதானே - விமர்சனம்
02 Oct 2023ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே. எஸ்.
-
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும் : காங். தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்
02 Oct 2023சென்னை : தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.
-
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
02 Oct 2023சென்னை : இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசி
-
உலக கோப்பை கிரிக்கெட் அகமதாபாத்தில் 4ம்தேதி கோலாகல தொடக்க விழா: கண்கவர் நடனம்,லேசர் ஷோவுக்கு ஏற்பாடு
02 Oct 2023அகமதாபாத் : 13-வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
-
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, கார்கே மரியாதை
02 Oct 2023புதுடெல்லி : மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கா
-
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு
02 Oct 2023சென்னை : மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதால் தமிழக கிராம பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சென்னையில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
02 Oct 2023சென்னை : சென்னையில் பா.ஜ.க.
-
சித்தா விமர்சனம்
02 Oct 2023சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் சித்தார்த் தயாரிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் படம் சித்தா. கதை, சித்தார்த்.
-
SD மணிபால் இயக்கும் சாலா
02 Oct 2023பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கும் படம் சாலா. ரியலிஸ்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தீரன் நடிக்கிறார்.
-
அக்.6ல் வெளியாகும் The Exorcist Believer
02 Oct 2023ஹாலிவுட்டின் பிரபலமான Halloween தொடர் படங்களை இயக்கியுள்ள David Gordon Green இயக்கியிருக்கும் படம் The Exorcist Believer, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு The Exorci
-
அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
02 Oct 2023சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வல
-
காமராசரின் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் மரியாதை
02 Oct 2023சென்னை : பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.
-
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் சில நொடிகளில்
02 Oct 2023ஜீன்ஸ், மின்னலே போன்ற படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'சில நொடிகளில்' என்ற படத்தை இப்போது வெளியிடுகிறது.
-
வரும் 7-ம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி
02 Oct 2023திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் வரும் 7-ம் தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியானதாக தெரிவ
-
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும் : வானதி சீனிவாசன் பேட்டி
02 Oct 2023கோவை : மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.