எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மிக்ஜாம் புயல் வலுவடைந்து 5.12.23 செவ்வாய்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணி அமைப்புகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளையும் (0 5.12.2023 செவ்வாய்கிழமை) பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதாலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதாலும், ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிருவாகங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இம் முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.
மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
மத கஜ ராஜா விமர்சனம்
12 Jan 2025திருமணம் ஒன்றில் தனது சிறு வயது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும் ஒருவனால் பெரும் பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-01-2025
12 Jan 2025 -
எம்.ஜி. ராயன் எழுதி இயக்கும் கள்ள நோட்டு
12 Jan 2025எம்.ஜி.ரா.
-
செக் குடியரசு ஓட்டலில் பயங்கர தீ: 6 பேர் பலி
12 Jan 2025பிராக் : வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
-
வாசலில் வண்ணக் கோலமிட்டு தை மகளை நாம் வரவேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை நாம் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த
-
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
12 Jan 2025சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
S.முருகன் தயாரிக்கும் கொஞ்சநாள் பொறு தலைவா
12 Jan 2025ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச
-
இன்று வெளியாகிறது தருணம் படம்
12 Jan 2025அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’.
-
வணங்கான் விமர்சனம்
12 Jan 2025இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம வணங்கான். V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.
-
6.1 ரிக்டர் அளவில் மெக்சிகோவில் நிலநடுக்கம்
12 Jan 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும்: திருமாவளவன்
12 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
அயலக தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Jan 2025சென்னை : ‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு அயலக தமிழர்களுக்கு
-
உடல்நலக்குறைவால் நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
12 Jan 2025நெல்லை, நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நேற்று உயிரிழந்தது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை
12 Jan 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.;
-
வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
12 Jan 2025சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயில் ரூ.10,770 கோடி பங்களா நாசம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது.
-
தமிழகம் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jan 2025சென்னை : இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகம்: விவேகானந்தர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
-
அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலி
12 Jan 2025லுவாண்டா, அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
-
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
12 Jan 2025தர்மபுரி : மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர் பிறந்தநாளில் ஜனாதிபதி முர்மு புகழாரம்
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
12 Jan 2025ஒட்டாவா : கனடா பிரதமர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுகிறார்.
-
நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: மக்களுக்கு இ.பி.எஸ். பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இளம் மாணவர்களே இந்தியாவின் பெரிய பலம் : லண்டனில் ஓம் பிர்லா பேச்சு
12 Jan 2025லண்டன் : இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.