எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெல்லை : நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தின் போது வடங்கள் அறுந்து விழுந்ததால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.பல்வேறு சிறப்புகள் அமையப் பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் 9-வது நாளான நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெல்லை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நேற்று தேரோட்டத்தை யொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. நேற்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி -அம்பாள் தேரில் எழுந்தருளினர். காலை 6.30 மணி முதல்7.46 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிற்பகலில் வடக்கு ரதவீதிக்கு வந்து சேர்ந்த சுவாமி தேர் அங்கு நிறுத்தப் பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
முன்னதாக தேரோட்டத்தை கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் சுவாமி தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த போது திடீரென தேரில் பொருத்தப்பட்டிருந்த 4 வடங்களில் 2 மற்றும் 3-வது வடங்கள் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 மாற்று வடங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் 8.16 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் 2-வது முறையாக தேர் வடம் ஒன்று அறுந்து விட்டது. இதையடுத்து 3 வடங்களுடன் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. எனினும் 2 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.
இந்நிலையில் 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 முறை வடம் அறுந்து விட்டது. இதனால் 2 வடங்கள் மட்டுமே தேரில் இறுதியாக பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இரும்பு சங்கிலி கட்டப்பட்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து
06 Feb 2025திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
-
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் விலகல்
06 Feb 2025வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
06 Feb 2025அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
நெல்லையில் புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Feb 2025நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
-
இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? காங்கிரஸ் எம்.பி. ரன்தீப்சிங் கேள்வி
06 Feb 2025புதுடில்லி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி.
-
இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ப
-
மீண்டும் சொதப்பிய ரோகித்
06 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
-
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு
06 Feb 2025புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-02-2025.
06 Feb 2025 -
12ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்
06 Feb 2025சென்னை, தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
தனது பெயரை எடேர்னல் என மாற்றிய சொமாட்டோ நிறுவனம்
06 Feb 2025மும்பை, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Feb 2025சென்னை, மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பள்ளி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
06 Feb 2025சென்னை, போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெ
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு
06 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்
-
மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
06 Feb 2025மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது: த.வெ.க. தலைவர் விஜய்
06 Feb 2025சென்னை, சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
இந்தியர்களுக்கு கை விலங்கு போட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக
-
கைவிலங்கு போடப்பட்ட விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
06 Feb 2025புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Feb 2025சென்னை, யு.ஜி.சி. புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.