எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரபல வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் 129 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக விளையாடி 2,551 ரன்களும் 149 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 70 டெஸ்ட்டில் 4,600 ரன்களும் 242 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஷகிப் ஓவரில் அதிரடியாக ரன்கள் குவித்தார். அறுவைச் சிகிச்சை காரணமாக மோசமாக பந்துவிசீய ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஷகிப் கூறியதாவது: நான் எனது கடைசி டி20 கிரிக்கெட்டினை டி20 உலகக் கோப்பையில் விளையாடினேன். இது குறித்து நான் தேர்வுக்குழுவுடன் பேசியிருக்கிறேன். 2026 உலகக் கோப்பைக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் சரியான் ஆள்களை தேர்வு செய்யுமென நம்புகிறேன். எனது கடைசி டெஸ்ட் போட்டியாக கான்பூரில் நடக்கும் போட்டியில் விளையாட ஆசைப்படுகிறேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். என்னை வங்கதேசம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்கிறார்கள். அது நடக்காவிட்டால் கான்பூர் டெஸ்ட் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்றார்.
ரிஷப் பண்டுக்கு புகழாரம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கடந்த 2022 அம் ஆண்டு இறுதியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன் பின், ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப் பண்ட் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பினார். அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியும் அசத்தினார்.
கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். ரிஷப் பந்த மிகச் சிறந்த வீரர். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராக இருக்க விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக அவர் பல கடினாமன சூழல்களைக் கடந்து வந்துள்ளார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது. அவர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். இன்னும் அவர் இளம் வீரரே. போட்டிகளை வென்று கொடுப்பதை அவர் விரும்புகிறார். அவர் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார். அவர் அழகாக எப்போதும் சிரிப்புடன் இருக்கிறார் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
பாக். தொடரில் ஸ்டோக்ஸ்..?
தி ஹண்ட்ரட் தொடரில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கின்போது 2 ரன்களில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேற அவருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் களம் கண்டார். போட்டி முடிவடைந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் ஊன்றுகோல் வைத்து நடந்து வந்து வீரர்களிடம் கை குலுக்கினார். இதனையடுத்து, இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் ஆக.21இல் தொடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஆலி போப் கேப்டனாக செயல்பட்டார்.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடவிருக்கிறது. அக்.7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கலந்துகொள்வார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ( ஈசிபி ) தெரிவித்துள்ளது. 33 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் 105 டெஸ்ட்டில் 6,508 ரன்களும் 203 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், “ஸ்கேன் செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதால் அவர் குணமாகிவிட்டதாக தெரிகிறது. 6 வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பாகிஸ்தான் தொடருக்கு ஆயுத்தமாகுகிறார்” என்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது