எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத் - கேரளா, மும்பை - விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் 160 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால், மொத்தமாக 391 ரன்கள் குவித்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல்கட்ட அணித் தேர்வில் இடம்பிடித்திருந்த ஜெய்ஸ்வால், கடைசி நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை.
இந்நிலையில் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி அரையிறுதியில் விளையாடவிருக்கும் வேளையில் ஜெய்ஸ்வாலின் வருகை மும்பை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 17 ஆம் தேதி தொடங்கும் நிலையில், குஜராத் - கேரளம் இடையிலான போட்டி அகமதாபாத்திலும், மும்பை - விதர்பா இடையிலான அரையிறுதி போட்டி நாக்பூரிலும் நடக்கவிருக்கிறது.
___________________________________________________________________________________________
பாபர் அசாம் புதிய சாதனை
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மேலும், இந்தப் போட்டியில் அசாம் 10 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையையும் சமன் செய்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் பாபர் அசாம்.
___________________________________________________________________________________________
பீட்டர்சன் மகனுக்கு கோலி பரிசு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடரின் வர்ணனையாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவிட் பீட்டர்சன் இடம் பெற்றிருந்தார். இங்கிலாந்து தொடரின் போது விராட் கோலி மற்றும் கெவிட் பீட்டர்சன் இருவரும் சந்தித்து பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் மகனுக்கு விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வீட்டிற்கு வந்து, டைலன் பீட்டர்சனுக்கு விராட் கோலி அளித்த பரிசை கொடுத்தேன். இது அவருக்கு கையுறை போல பொருந்துகிறது. நன்றி நண்பா என பதிவிட்டுள்ளார்.
___________________________________________________________________________________________
ரஞ்சி கோப்பை: அரையிறுதி சுற்று
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி ஆரம்பமாக உள்ளன. அகமதாபாத்தில் நடக்கும் முதலாவது அரையிறுதியில் குஜராத் - கேரளா அணிகளும், நாக்பூரில் நடக்கும் 2-வது அரையிறுதியில் மும்பை - விதர்பா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
19 Mar 2025புதுடெல்லி : இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் வைகோ குற்றச்சாட்டுககு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
19 Mar 2025சென்னை : ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
-
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர பேருந்து பயண அட்டை அறிமுகம் : அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பஸ் பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
மிரட்டும் தொணியில் பேசுவதா? - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
19 Mar 2025சென்னை : திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
ஆவின் மூலம் கூடுதல் பால் கொள்முதல் : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
19 Mar 2025சென்னை : ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் இருக்கும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
19 Mar 2025சென்னை : சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன
-
தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு : சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
19 Mar 2025சென்னை : தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
19 Mar 2025ஸ்ரீநகர் : எல்ல தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு இடம்
19 Mar 2025திருப்பதி : இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
6 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி மணிப்பூர் பயணம் : பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டம்
19 Mar 2025புதுடெல்லி : மணிப்பூரில் கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
புதுச்சேரியில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் : தமிழ் புத்தாண்டில் தொடக்கம்
19 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுதோறும் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு-தேர்வர்கள் அதிர்ச்சி
19 Mar 2025புதுடெல்லி : ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப
-
பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு
19 Mar 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
19 Mar 2025சென்னை : 9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மறைந்த அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டிய தேவை என்ன? - வேல்முருகன் கேள்வி
19 Mar 2025சென்னை : அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன என்று தமீழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்
19 Mar 2025காந்திநகர் : பூமிக்கு திரும்பியதை அடுத்து சுனிதா வில்லியம்ஸின் பூர்வீக கிராமத்தில் கொண்டாடப்பட்டது.