எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக புதிய எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்" என்ற தலைப்பின்கீழ், ‘சமையலறை சாதனங்கள் வழங்கல்’ என்ற உபதலைப்பின்கீழ், சத்துணவு மையங்களுக்கு 25.41 கோடி ரூபாய் செலவில் புதிய சமையல் உபகரணங்கள் 2022-2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 2025-2026-ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்" என்ற தலைப்பின்கீழ், ‘சத்துணவு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள்’ என்ற உபதலைப்பின் கீழ், சத்துணவு மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சத்துணவு மையங்களில் சமையல் உபகரணங்கள் எரிவாயு இணைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2100 சத்துணவு மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறை படிப்படியாக கட்டுவதற்காக 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நிதி ஒதுக்கியும், 18-04-2025 அன்று விருத்தாசலம் அடுத்த செம்பனக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 09-04-2025 அன்று கடலூர் சத்துணவு மையத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு, எரிவாயு உருளையில் பொருத்தப்பட்டுள்ள ரெகுலேட்டர், காஸ் டியூப் போன்றவை பழுதடைந்திருப்பதே காரணம் என்றும், பல சத்துணவு மையங்களில் இந்த நிலைமைதான் நிலவுகிறது என்றும், புதிய காஸ் அடுப்பு கேட்கப்பட்டாலும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய காஸ் அடுப்புதான் வழங்கப்படுகிறது என்றும் சத்துணவு மையங்களில் பணிபுரிவோர் தெரிவிக்கின்றனர்.
சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக புதிய எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கிடுமாறும், அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி சரியாக செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திடுமாறும் முதல்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு
23 Jun 2025புதுடெல்லி : ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.
-
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது சென்னை போலீசார் நடவடிக்கை
23 Jun 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு
23 Jun 2025சென்னை, தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு நிலவியது.
-
வால்பாறைக்கு இடைத்தேர்தலா ? தேர்தல் ஆணையம் விளக்கம்
23 Jun 2025சென்னை, வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
23 Jun 2025மாஸ்கோ : இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதினை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.
-
ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் இந்தியர்கள் 160 பேர் மீட்பு
23 Jun 2025ஜெருசலேம், 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் முறைகேடு புகாரில் வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கைது
23 Jun 2025டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
-
9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
23 Jun 2025சென்னை, தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
23 Jun 2025திருட்டு தொழில் செய்யும் நாயகன் வைபவ் மற்றும் அவரது நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2 கோடி பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார்.
-
புதுச்சேரி அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
23 Jun 2025புதுக்கோட்டை : புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.
-
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
23 Jun 2025அமராவதி, கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டி.என்.ஏ. திரை விமர்சனம்
23 Jun 2025அதர்வா மனைவி நிமிஷா சஜயனுக்கு பிறக்கும் குழந்தை சில நிமிடங்களில் மாற்றப்பட்டு கடத்தப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை கடத்தப்படவில்லை என்கிறது.
-
தரையிறங்கும் முயற்சி தோல்வி: ஸ்ரீநகர் புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது
23 Jun 2025டெல்லி : ஸ்ரீநகர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் இடைவிடாது ஒலித்த சைரன்
23 Jun 2025டெல் அவிவ், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
23 Jun 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
23 Jun 2025தெஹ்ரான், ஐ.நா.
-
ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
23 Jun 2025சென்னை, நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடுகளும்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு தாக்கல்
23 Jun 2025சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க
-
4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி
23 Jun 2025புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
-
விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ்
23 Jun 2025அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திர
-
குபேரா திரை விமர்சனம்
23 Jun 2025அரசின் ஒரு திட்டத்தை அபகரிக்க நினைக்கும் தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லஞ்சமாக கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிக்கிறார்.
-
ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பால் மேலும் பதற்றம்
23 Jun 2025மாஸ்கோ : ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
தாக்குதல் திட்டம் எதிரொலி: அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
23 Jun 2025ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இதுவரை 950 பேர் உயிரிழப்பு
23 Jun 2025டெஹ்ரான் : ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று (ஜூன் 23) வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்
-
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Jun 2025சென்னை, 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.