எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இங்கிலாந்தில் இ.சி.எஸ். டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்போர்டு அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது. இதில் இந்த அணியில் கேபட்ன் உஸ்மான் கனி 43 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் அடங்கும்.
கில்ட்போர்டு பந்து வீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். ஒரே ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய கில்ட்போர்டு அணி 155/4 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்கர் மிகைல் 47, டோமனிக் 33 ரன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி வென்றது. உஸ்மான் கனி (28 வயது) ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________
2-வது வீரராக ரூட் சாதனை
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் அடித்தன. இந்த இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன ஜோ ரூட் 29 ரன்கள் அடித்தார். இதனையும் சேர்த்து சொந்த மண்ணில் (இங்கிலாந்து) இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் இதுவரை 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற அரிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் (2,354 ரன்கள்) அடித்து முதல் வீரராக இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். தற்போது 2-வது வீரராக ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
____________________________________________________________________________________
துலீப் கிரிக்கெட் தொடரில் ஷமி
துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஸ்டாண்டி பிளேயர் ஆக இடம் பிடித்துள்ளார்.
அணி விவரம்:- இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி
ஸ்டாண்டி பிளேயர் :- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங். கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.
____________________________________________________________________________________
பாத்ரூமில் அழுத கோலி: சாஹல்
2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை தாங்க முடியாமல் அப்போதைய கேப்டன் விராட் கோலி பாத்ரூமில் அழுததாக யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சாஹல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 63 ரன்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி களத்தில் உருவாக்கும் ஆற்றலை யாருடனும் ஒப்பிடவே முடியாது. ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரின் அடைந்த தோல்விக்கு பின் பாத்ரூமில் விராட் கோலி அழுவதைப் பார்த்தேன். அதுதான் தோனியின் கடைசி போட்டியும் கூட.அந்த போட்டியை நினைக்கும் போதெல்லாம் சிறப்பாக பவுலிங் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் என்று கூறினார்.
____________________________________________________________________________________
சாதனையை தவறவிட்ட கில்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் ஷுப்மன் கில் 11 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் 754 ரன்கள் குவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க ஷுப்மன் கில்லுக்கு 21 ரன்களே தேவைப்பட்ட சூழலில், அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம், வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வசமே உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
08 Dec 2025புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
08 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாள
-
தமிழகத்தில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு
08 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2025
08 Dec 2025 -
பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்
08 Dec 2025மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
08 Dec 2025கரூர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி
08 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
புதுச்சேரி த.வெ.க. பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை - என்.ஆனந்த்
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த த.வெ.க. தொண்டர்களுக்கு அனுமதியில்லை என்று பொதுசெயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
-
தி.மு.க. ஊழல்: கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு
08 Dec 2025சென்னை, தி.மு.க. ஊழல் கூறித்து கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
-
புதுச்சேரி இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க.தலைவர் விஜய் பேசுகிறார்: 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.
-
முதல்வர் சார்தான் உதவி பன்னணும்: கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
08 Dec 2025சென்னை, உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
-
வனவிலங்கு இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைத்த அரசு
08 Dec 2025சென்னை, யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்து விரோத அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: வானதி சீனிவாசன்
08 Dec 2025சென்னை, தி.மு.க.வின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
-
த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி: டிடிவி தினகரன் பரபரப்பு
08 Dec 2025திருப்பூர், த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
08 Dec 2025சென்னை, 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி
08 Dec 2025திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ குளறுபடிகள் குறித்து பார்லி. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
08 Dec 2025புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாய
-
நடிகை பாலியல் வழக்கு: பிரபல மலையாள பட நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட் உத்தரவு
08 Dec 2025எர்ணாகுளம், நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவாதம்: பா.ஜ.க. பார்லி., கூட்டம் இன்று கூடுகிறது
08 Dec 2025டெல்லி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (டிச. 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Dec 2025சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் விருதுகளை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்
08 Dec 2025சென்னை, மத்திய அரசின் தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்ற 5 மாவட்டங்களின் கலெக்டர்கள் தமிழக முதல்வர்
-
இன்று தொடங்கும் டி-20 தொடருக்கு ஹார்திக், சுப்மன் கில் தயார்: கேப்டன் சூர்யகுமார் யாதவ்
08 Dec 2025மும்பை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவ
-
சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்
08 Dec 2025கோவை, சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
100 சதங்கள் அடிப்பார்: கோலி மீது கவாஸ்கர் நம்பிக்கை
08 Dec 2025மும்பை, கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.


