எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சாதிகளை ஒழிப்பதற்கு சிறந்த வழி என்ன? என்று ஆசிரியர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த முட்டாள் மாணவன், "அனைவரின் சாதி சான்றிதழ்களையும் வாங்கி கிழித்து எறிந்து விடலாம். அவ்வாறு செய்தால் யாரிடமும் சாதிக்கு சான்று இருக்காது. அதனால் சாதி ஒழிந்து விடும்" என்று கூறியிருந்தானாம். தமிழ்நாட்டின் தெருக்களில் சாதிகளை ஒழிக்கப் போவதாக தி.மு.க. அரசு ஆணை வெளியிட்டிருப்பதும் அப்படிப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.
சாதிகள் ஒழிக்கப்பட வேண்டியவையே. ஆனால், சட்டத்தைப் போட்டு சாதியை ஒழிக்க முடியாது; அரசாணைகளை வெளியிட்டு அவற்றை சாதிக்க முடியாது. மாறாக, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, சாதியை ஒழிப்பதற்கான சிறந்த வழி சமத்துவத்தை நோக்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பது தான். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க. அரசு, சீனி, சக்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் ஒட்டிக் கொண்டு இனிப்பதைப் போன்று நடிப்பதைப் போலவே, கிராம சபைக் கூட்டங்களில், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கான தீர்மானங்களை இயற்றுவதன் மூலம் சாதிகளை ஒழிக்கப் போவதாக மாயையில் உழன்று கொண்டிருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் சாதியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்து 58 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்காக ஆக்கப்பூர்வமாக எதை செய்திருக்கிறது? சாதியை ஒழிக்கும் நோக்குடன் தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தலாம்; அதன் மூலம் என்றாவது ஒருநாள் சாதி ஒழியும் என்பது தான் சமூகநீதியாளர்களின் நோக்கம். ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்ற தி.மு.க. என்ன செய்திருக்கிறது?
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் முழுமையாக அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், பட்டியலினமாக இருந்தாலும் அந்த வகுப்புகளுக்குள் இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவிக்காத சமுதாயங்கள் ஏராளமாக உள்ளன. அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்களை கிடைக்கச் செய்வதற்கான ஒரே தீர்வு உள் இடஒதுக்கீடு தான். தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடுகளை வழங்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அண்டை மாநிலமான கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40 சதவீத இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகவே இருந்தது. ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகத் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தனியாக ஏற்படுத்தப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகநீதியில் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகம் பல படிகள் பின் தங்கிக் கிடக்கிறது. இதை சரி செய்ய தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், அரசு பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல், தற்காலிக நியமனங்கள், குத்தகை நியமனங்கள், ஒப்பந்த நியமனங்கள் ஆகிய முறைகளில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழித்துக் கட்டியது தி.மு.க. அரசு தானே. சமூகநீதியை இப்படியெல்லாம் படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்கான அடிப்படைத் தேவை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை பயன்படுத்தி தான் இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க. அரசுதான். அப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு சமத்துவம் குறித்தோ, சாதி ஒழிப்பு குறித்தோ பேசுவதற்கு தகுதி உண்டா?
தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை நீக்குவதாகக் கூறி அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை தி.மு.க. அரசு இயற்றியது. அந்த சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோவிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த அவலத்தை போக்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி வழங்கப்படாத 209 அர்ச்சகர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின் இன்று வரை அதை நிறைவேற்றாதது தான் சமூகநீதியா? சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் தி.மு.க., அதன் 76 ஆண்டு கால வரலாற்றில் எத்தனை பட்டியலினத்தவரை பொதுத் தொகுதிகளில் நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறது? தி.மு.க.வின் பட்டியலின முகமாக அறியப்படும் ஆ.ராசவைக் கூட, அவரது சொந்தத் தொகுதியான பெரம்பலூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, அங்கு நிறுத்தாமல் 350 கி.மீ தொலைவில் உள்ள நீலகிரிக்கு அனுப்பி வைத்த கட்சி தானே தி.மு.க.. பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்று தி.மு.க.வின் 3 முதன்மைப் பதவிகளில் ஒன்றை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா? இப்படியாக சமத்துவத்தை ஏற்படுத்தவும், சாதியை ஒழிக்கவும் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க. சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?
தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதாக அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே கோவை பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டிய இரட்டை வேடக் கட்சி தானே தி.மு.க.? அப்படிப்பட்ட தி.மு.க. அரசாணைகளை பிறப்பிப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போவதாக நாடகங்களை நடத்தக் கூடாது. மாறாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, அரசு பணிகளை தற்காலிகமாக நிரப்பாமல், இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தரமாக நிரப்புதல் ஆகியவற்றின் வாயிலாகத் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 12-ம் கனமழை: வானிலை ஆய்வு மையம்
08 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.


