எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இரு பிரிவுகளாக புறப்பட்டது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்தது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்த தொடருடன் கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பேசும் பொருளாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று வைத்துள்ளார். அதில் "நீங்கள் உண்மையிலேயே தோல்வி அடைவது, நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போதுதான் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.
குல்தீப் யாதவ் முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரு இடம் முன்னேறி மறுபடியும் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் பும்ரா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 14-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாக்., அணிக்கு புதிய கேப்டன்?
டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சல்மான் அகா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அணியின் துணைக் கேப்டனாக ஷதாப் கான் செயல்படுகிறார். காயம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு துணைக் கேப்டனான ஷதாப் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஷதாப் கான் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆல்ரவுண்டரான ஷதாப் கான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 70 ஒருநாள் மற்றும் 112 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். கடந்த ஜூனில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார். அதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கான புதிய கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸி. - இங்கி. வீரர்கள் மோதல்
முன்னாள் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடர் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆஷஸ் தொடர் வருகிற நவ.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் திடலில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி முதல் போட்டியும் ஜன.4ஆம் தேதி கடைசி போட்டியும் நடைபெற இருக்கின்றன. இதுவரை நடந்த 73 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் வென்றிருக்கின்றன. இன்னும் 50க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இரு நாட்டு வீரர்களும் இதுகுறித்து பேசத்தொடங்கியுள்ளனர்.
முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இது பற்றி பேசியதாவது: கம்மின்ஸ் இல்லையென்றால் 3-1 எனவும் கம்மின்ஸ் இருந்தால் 4-0 எனவும் ஆஸ்திரேலியா வெல்லும். கம்மின்ஸ் இல்லாவிட்டால் முதல் டெஸ்ஸ்டை இங்கிலாந்து வெல்லாம். நாங்கள் ஆஷஸ் தொடரை வெல்வதற்காக விளையாடுவோம். அவர்கள் எப்போதும்போல தார்மீக வெற்றிக்காக விளையாடுவார்கள் என்றார். இங்கிலாந்து அணி தொடர்களில் தோற்கும்போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்லி ஏமாற்றுவதைக் கிண்டல் செய்யும் வகையில் வார்னர் பேசியிருந்தார்.
டேவிட் வார்னரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட் பதிலடி தந்துள்ளார். அவர் பேசியதாவது: 2010க்குப் பிறகு இருப்பதிலேயே மிகவும் பலவீனமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இது வெறுமனே ஒரு கருத்து அல்ல, உண்மை இதுதான். கடைசியாக 2010-இல் இங்கிலாந்து வென்றிருந்தது. தற்போது இருக்கும் இங்கிலாந்து அணி 2010-க்குப் பிறகான சிறந்த அணியாக இருக்கிறது என்றார். ஆஷஸ் தொடர் குறித்து, இரு நாட்டு வீரர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
லக்னோ அணியில் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அவர் சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார் (மொத்தம் 27 ரன்கள்), மேலும் 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனா இறுதிக்கு தகுதி
யு-20 உலகக் கோப்பைக்கான அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மேடியோ சில்வெட்டி கோல் அடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி அணியில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதின. அந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிய ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. அதில் மொராக்கோ 5-4 என த்ரில் வெற்றி பெற்றது.
யு-20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொராக்கோ அணியும் ஆர்ஜெண்டீனாவும் அக்.20ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மோதவிருக்கிறது. ஆடவர் கால்பந்து உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா வென்றது. அதேபோல் யு-20 உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துமா என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்?
17 Nov 2025மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
18 Nov 2025சென்னை: 65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு
18 Nov 2025சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலி
18 Nov 2025திண்டுக்கல்: அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
18 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆந்திரா: 6 மாவோயிஸ்டுகள் டுகொலை
18 Nov 2025விசாகப்பட்டினம்: ஆந்திராவில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
18 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


