எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
ஜூலனின் சாதனை முறியடிப்பு
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் நாட் சிவெர் (64 ரன்), அலிஸ் கேப்சி (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
தென்ஆப்பிரிக்க தரப்பில் மரிஜானே காப் 7 ஓவர்களில் 3 மெய்டனுடன் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்ளையும் சேர்த்து மரிஜானே காப் இதுவரை மகளிர் உலகக் கோப்பையில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியிடம் (43 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.
5 சிறந்த இந்திய வீரர்கள்: மெக்ராத்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் தேர்வு செய்துள்ளார். முதலாவதாக விராட் கோலியை தேர்வு செய்துள்ள அவர், 2-வது இடத்தில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து ஆச்சரியமளித்துள்ளார்.
3-வதாக சச்சின் தெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களான சேவாக், டிராவிட் போன்ற வீரர்களை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார். மெக்ராத் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள்: 1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. சச்சின் தெண்டுல்கர், 4. மகேந்திரசிங் தோனி, 5. யுவராஜ் சிங் .
மீண்டும் களத்தில் ரிஷப் பண்ட்
இந்தியா ஏ- தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் தொடங்கியது. காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளார். அதன்படி ரிஷப் பண்ட் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ஷ்ரேயாஸ் உருக்கமான பதிவு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் குணமடைந்து வருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுளளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்?
17 Nov 2025மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
உலகக் கோப்பையில் அதிகமுறை பங்கேற்பு: புதிய சாதனை படைக்கிறார்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ
17 Nov 2025போர்ச்சு : மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
அபார வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
18 Nov 2025சென்னை: 65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு
18 Nov 2025சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலி
18 Nov 2025திண்டுக்கல்: அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
18 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
18 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆந்திரா: 6 மாவோயிஸ்டுகள் டுகொலை
18 Nov 2025விசாகப்பட்டினம்: ஆந்திராவில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.


