எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது என்று மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர், 2020-ம் ஆண்டில் மதுரையில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். அப்போது பெண் வக்கீலை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் எனவும் மகளிர் போலீசில் கடந்த ஜனவரி மாதம் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த வாலிபர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் அபுல்கலாம் ஆசாத் ஆஜராகி, மனுதாரர் தன்னுடன் பழகிய பெண் வக்கீலிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்ற தவறிவிட்டார். அவர் மீதான நடவடிக்கை சட்டப்பூர்வமானது என வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரருக்கும், புகார்தாரருக்கும் இடையிலான உறவு 2020-ம் ஆண்டில் இருந்து சில மாதங்கள் வரை நீடித்து இருக்கிறது என்பது பல்வேறு ஆவணங்கள் மூலம் தெரிகிறது. புகார் அளித்தவர் ஒரு சட்டம் படித்தவர். வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார். ஒருவருடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிவார். அந்த வகையில் இருவரும் பழகியபோது பெண் வக்கீலை ஏமாற்றும் நோக்கம் மனுதாரருக்கு இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்போது சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த கோர்ட்டு கவனத்தில் கொள்கிறது. அதாவது, வயது வந்தவர்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாக இருப்பது சாதாரணமாகி வருகிறது. கால மாற்றத்தின் விளைவு என்ன என்பதற்காக மட்டுமே இதனை இந்த கோர்ட்டு தெரிவிக்கிறது. உணர்ச்சி ரீதியான ஈர்ப்புக்கும், உடல் ரீதியான உறவுக்கும் இடையில் உள்ள கோடு தெளிவற்றது. எனவே இருவரின் தனிப்பட்ட பழக்கம் என்பது அன்பு நிறைந்ததா, திருமண எதிர்பார்ப்புடன் இருந்ததா, வெறும் இன்பத்துக்கானதா என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனை கோர்ட்டு உறுதிப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் இயலாமையின் காரணமாக உரிய நபர்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே சட்டம் தலையிடும்.
மேற்கண்ட இருவரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள். அவர்களுக்கு இடையே நடந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்ப நடவடிக்கை. எனவே ஒருவர், மற்றவர் மீது தார்மீக குற்றத்தை சுமத்த சட்டத்தை கருவியாக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. சமீப காலமாக இந்த வகையான புகார்கள் அதிகரிப்பதை இந்த கோர்ட்டு கவனத்தில் கொள்கிறது. அந்த வகையில் மனுதாரர் மீது வழக்கு தொடர்ந்தது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு சமம் என இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2025
13 Nov 2025 -
நெல்லையில் வருகிற 21-ம் தேதி கடலம்மா மாநாடு: சீமான் தகவல்
13 Nov 2025நெல்லை, நெல்லையில் வருகிற 21-ந்தேதி கடலம்மா மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
13 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்று 2-வது முறை உயர்ந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்
13 Nov 2025சென்னை, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
13 Nov 2025புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.
-
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க்: அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
13 Nov 2025சென்னை, மேகதாது அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
பீகாரில் 243 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
13 Nov 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 243 தொகுதிகளில் பதிவான வாக்குக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
13 Nov 2025சென்னை: மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டால
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு
13 Nov 2025சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்திப்பு
13 Nov 2025நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்தித்து பேசினார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்கா கருத்து
13 Nov 2025வாஷிங்டன்: டெல்லியில் தெளிவான பயங்கரவாத தாக்குதல் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை
13 Nov 2025பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


