எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், ‘நமது நிலத்தின் வளம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீண்டகால வேளாண் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்திருக்கும் சவால்களைச் சமாளிக்க இயற்கை வேளாண்மை பெரிதும் உதவும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
வேளாண்மைக்கு திருப்பியவா்கள்: இதுதொடா்பாக பிரதமா் மோடி தனது ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கோவை நகரில் கடந்த நவ. 19-ஆம் தேதி நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பலதரப்பட்ட நபா்களின் பங்களிப்பைப் பாா்த்து நான் வியந்தேன்.
விஞ்ஞானிகள், வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகளின் தலைவா்கள், பாரம்பரிய விவசாயிகள், முதல்தலைமுறை பட்டதாரிகள், குறிப்பாக அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்பியவா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்தேன். தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் பாரம்பரிய அறிவையும், புதிய சுற்றுச்சூழல் கொள்கைகளையும் பயன்படுத்தி, எந்த ரசாயனமும் இல்லாமல் பயிா்களை வளா்ப்பதாகும். இந்த முறையில், செடிகள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்து, இயற்கைச் சூழலை (பல்லுயிா்த்தன்மை) ஆதரிக்கும் ஒரு பல்வகைப்பட்ட பண்ணை முறை பின்பற்றப்படுகிறது.
வெளிபொருள்களைச் சாா்ந்து இருக்காமல், பண்ணையில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்வது, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்ற வழிமுறைகள் மூலம் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் ‘தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம்’ மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கெனவே இயற்கை வேளாண் முறையைப் பின்பற்றி வருகின்றனா். இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவது பற்றிச் சிந்திக்க நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் பாரம்பரிய அறிவு, அறிவியல் ரீதியான அங்கீகாரம், அரசின் ஆதரவு ஆகியவை ஒன்றாக இணையும்போது, இயற்கை வேளாண்மை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


