எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில பிரெண்டோட பேசிக்கிட்டிருக்கும் போது ஏன் மச்சான், இந்த விலங்கு, பறவை இதுக எல்லாம் நம்மள போலவே கலர் கலரா பார்க்குமா, உனக்குதான் அறிவியல் தெரியும்ல கொஞ்சம் சொல்லேன் என்றான். அப்பதான் விலங்குகளோட கலர் சென்ச பத்தி உங்களுக்கு சொல்லலாம்னு ஒரு ஐடியா டக்குன்னு தோணுச்சு... அத பத்தி பார்க்கலாமா..
நாம தான் இந்த உலகத்தை விதவிதமான கலர்ல எட்டு பரிமாணத்துக்கும் மேலே ஜாலியா பார்த்து என்ஜாய் பண்றோம். ஆனா விலங்குகளுக்கு அவ்வளவு சென்சு கிடையாது. ஆனா நம்மள விட கில்லாடியான விலங்குகளும் இந்த பூமியில இருக்குதுக. நடமாடும் உயிரினங்களில் பெரும்பாலும் இரண்டு கலர்களை மட்டும்தான் சென்ஸ் பண்ண முடியும்... ஆன ஒரு சில விலங்குக நம்மள மாதிரியே 7 நிறங்களையும் பிரித்து பார்க்க முடியும். ஆனால் ஒரு சில கில்லாடி விலங்குகள், உயிரனங்கள்னு சொன்னேனே அவை, நம்மை காட்டிலும் பெட்டராக, நாம் பார்க்க முடியாத புற ஊதா, அக சிவப்பு நிறங்களை கூட பார்க்கும்னா பார்த்துக்கோங்களேன். அதான் பார்க்க முடியாதுன்றீங்களா.. அதுவும் சரிதான். ஆனால் இன்னும் சிலதுக இருக்குக அதுகளுக்கு சூரிய வெளிச்சத்தில் மட்டும் நிறங்களை ஜோரா பிரிச்சு பார்த்துடும். இருட்டுல கொஞ்சம் டண்டணக்காதான். ஆனா யானை, பருந்து, அந்து பூச்சி மாதிரியான ஒரு சில உயிரினங்கள் என்ன டார்க்கா இருந்தாலும், கலரை கரெக்டா கண்டுபிடிச்சு பட்டையை கிளப்பிடும்.
அது சரி இந்த உயிரினங்களால எப்படி நிறத்தை பிரிக்க முடியுதுன்னு யோசிக்கிறீங்களா... ஒளிக்கதிரானது கண்களில் உள்ள ரெக்டீனாவில் (விழித்திரை) படும்போது ஃபோட்டோ ரெசிப்டார்கள் (ஒளிச்சேர்க்கையாளர்கள்) எனப்படும் ஒளி உணர்திறன் செல்களால் உள்வாங்கப்படுகின்றன. ஒளி உணர்திறன் செல்கள் கூம்புகளாகவும், தண்டுகளாகவும் உள்ளன. கண்ணில் கூம்புகளும், தண்டுகளும், மூளையானது ஒளிஅலைகளை வண்ணம், வடிவம் மற்றும் இயக்கம் எனப் பிரித்து அறியும் வண்ணம் மாற்றுகிறது. கூம்புகள் வண்ணங்களையும், தண்டுகள் ஒளியையும் மூளைக்கு விளக்குகின்றன. பெரும்பாலும் எல்லா விலங்குகளும் தண்டுகளையும், கூம்புகளையும் கொண்டுள்ளன. அரிதாக சில விலங்குகளில் கூம்புகள் இருப்பதில்லை. அவை நிறக்குருடுகளாக உள்ளன.
அது சரி நாம... அதான் மனுசப் பயலுக எப்படி நிறத்தை பார்க்கிறாங்க தெரியுமா..
மனிதக்கண்களில் மூன்று வகையான கலர் ரீசிவர்கள் அல்லது கூம்புகள் காணப்படுகின்றன. ஒளியின் நீண்ட, மிதமான, குறுகிய அலைநீளங்களைக் கொண்ட கதிர்கள் சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களாக இவ்வண்ண ரீசிவர்களால் மாற்றப்படுகின்றன.
இம்மூன்று கலர் ரீசிவர்களிலிருந்து வரும் சிக்னல்களை ஒப்பிட்டு நம்மால் வானவில்லின் ஏழு நிறங்களையும் காணமுடியும். ஆனால் மனிதனால் நிறங்களை நன்கு பிரித்தறிய அதிக ஒளி தேவை.
மனிதனில் உள்ள கலர் ரீசிவர்கள் அரை நிலவொளியைவிட இருளும் போது தனது செயல்பாடுகளை நிறுத்தி விடுகின்றன. அதாவது இருளில் நமது கண்களில் உள்ள கூம்புகள் வேலை செய்யாது. தண்டுகள் மட்டும் வேலை செய்கின்றன. ஆதலால் இருளில் நம்மால் வண்ணங்களைப் பிரித்தறிய முடியாமல் எல்லா பொருள்களும் சாம்பல் நிறநிழலாக மட்டுமே தெரிகின்றன.
சில விலங்குகள் மனிதனைவிட வேறு விதமான நிறங்களைப் பிரித்தறியும் தன்மையையும், இருளில் நன்கு பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
குறைந்த நிறங்களை அறியும் தன்மையும், இருளில் நல்ல பார்வைத்திறனும் உடையவை பூனைகளும், நாய்களும் தங்களது கண்களில் இரண்டு விதமான கலர் ரீசிவர்களை (கூம்புகள்) கொண்டுள்ளன. இவைகளில் சிவப்புநிற கலர் ரீசிவர்கள் காணப்படுவதில்லை. எனவே இவற்றால் சில நிறங்களை மட்டுமே பிரித்தறிய இயலும்.
இவைகளால் பொருட்களை ஊதா மற்றும் மஞ்சள் நிறநிழல்களாக மட்டுமே காண இயலும். உலகில் உள்ள பெரும்பாலான பாலூட்டிகள் இவ்வாறானவையாகவே காணப்படுகின்றன.
பூனைகள் மற்றும் நாய்கள் தங்கள் கண்களில் அதிகளவு தண்டுகளைக் கொண்டுள்ளன. ஆதலால் அவைகள் இருளில் மனிதனைவிட அதிக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன. ஆனால் நாய், பூனைகளைவிட மனிதனால் பலவண்ணங்களைப் பிரித்தறிய இயலும்.
வண்ணத்துப்பூச்சி, தேனீ உள்ளிட்ட பூச்சிகள் நான்கு வகையான கலர் ரீசிவர்களை கொண்டுள்ளன. அவைகளால் நிறமாலைமானியால் காணப்படும் புறஊதா நிறங்கள் உள்ளிட்டவைகளைக் காண இயலும். இத்திறமையால் இந்த கூடுதல் கலர் ரீசிவர்களை கொண்டுள்ளதால் அவைகளால் பூக்களின் உள்ளே சென்று அவைகளின் உணவுகளான மகரந்தத்தைச் சேகரிக்க இயலும். மேலும் இவை இப்பூச்சிகளின் எதிரிகளை அடையாளம் காணவும் உதவுகின்றன.
ஆனால் வேறு சில உயிரினங்கள் இருக்குதுக.. அவை வெப்பத்தால் நிறத்தை பிரித்து பார்க்கும் திறன் கொண்டதுங்க..
மலைபாம்புகள், ரேடில்ஸ்நேக், பியாஸ் உள்ளிட்ட பிட் வைப்பர் இனத்தைச் சார்ந்த பாம்புகளால் அகச்சிவப்பு நிறங்களைக் காண முடியும். அதாவது அவற்றால் வெப்ப உணர்வின் மூலம் பார்க்க முடியும். இவ்வகைப் பாம்புகளில் மூக்கிற்கும், கண்களுக்கும் இடையில் அமைந்துள்ள சிறப்பு குழியால் வெப்பநிலை மாற்றத்தை உணரமுடியும். இதனால் அருகில் வருகின்றன பொருட்களின் வெப்பநிலையைக் கொண்டு அவை மிகத்துல்லியமான அகசிவப்பு பார்வைத்திறனை பெறுகின்றன.
இப்பாம்புகளின் இப்பார்வைத்திறத்தால் ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள இரைகளைக்கூட இவற்றால் கண்டறிய இயலும். மேலும் 0.002 டிகிரி வெப்பநிலை மாற்றத்தையும் இவற்றால் உணர முடியும்.
மனிதனை காட்டிலும் பல்லிகள் இருளில் 350 மடங்கு நிறங்களைப் பிரிந்தறியும் தன்மையைப் பெற்றுள்ளன. அவற்றின் கண்களில் தண்டுகள் இருப்பதில்லை. இருளில் பல்லியின் கண்களில் உள்ள கூம்புகள் தண்டுகளாக செயல்படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளன.
அதேபோல் யானை, பருந்து, அந்துப்பூச்சி இருளில் பூக்களின் வண்ணங்களைப் பிரித்தறியும் தன்மையைப் பெற்றுள்ளன. இவை பகலில் வண்ணத்துப்பூச்சி செயல்படுவதைப் போல் இரவில் செயல்படுகின்றன. லெமூர் என்ற உயிரினமானது இரவில் குறிப்பிட்ட பச்சை நிறநிழலான தாவரத்தை உண்ணுகின்றது. இத்தாவர இலைகள் அதிக புரதச்சத்து கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
உலகின் அதிக வண்ணங்களைப் பிரித்தறியும் உயிரினம் மான்டிஸ் இறால் ஆகும். இதனை வண்ணம் பார்க்கும் ராஜ்ஜியத்தின் ராஜா என்றே குறிப்பிடலாம். இது 16 வகையான கலர் ரீசிவர்களை கொண்டுள்ளது. மனிதனை காட்டிலும் பத்து மடங்கு வண்ணங்களைப் பிரித்தறியும் தன்மையைக் கொண்டுள்ளது.இவற்றால் அகச்சிவப்பு முதல் புறஊதா வரை உள்ள வண்ணங்களையும், துருவமுனைப்புள்ள வண்ணங்களையும் காணமுடியும்.
இவற்றின் கண்கள் தனித்தண்டுகளில் அமைந்து அவை தனித்தனியே உருளும் அமைப்பினைக் கொண்டுள்ளன. இவற்றால் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசையில் இருக்கும் எதிரிகளையும், இரையையும் அடையாளம் காணமுடியும்.
இயற்கையானது உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காக உயிரிகளுக்கு வண்ண பார்வையை வழங்கியுள்ளது. அப்படியே இந்த விலங்குக எப்படி கலர்களை... ஹலோ அதாவது வண்ணங்களை எப்பிடி பார்க்குதுங்கன்றதையும் தெரிஞ்சுக்கிட்டீங்களா...
இயற்கை தந்த பரிசான வண்ண பார்வை மூலம் உலகைக் கண்டு மகிழ்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.