முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகாலையில் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், பிப்.23 - ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.6 ஆக இருந்ததால் பாதிப்பு அதிகம் இல்லை. இருந்தாலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்கள். லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் உடமைகளுக்கான சேதம் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை. கடந்த 2 நாட்களில் 3-வது முறையாக இங்கு பூகம்பம் ஒரே பகுதியில் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்