எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 23 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் ஆ.ராசாவுக்கு ரூ. 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளி சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் கிடைத்தது என்ற முக்கிய நபரும் சாதிக்பாட்ஷாவுக்கு மிகவும் வேண்டிய நண்பருமான ஒருவர் தெரிவித்தார். மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தபோது சில விதிமுறைகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. தயாநிதி மாறனுக்கு அடுத்து மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற ஆ.ராசா, இந்த புதிய விதிமுறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறையாக ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்று ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய நபர்களுக்கு கமிஷன் போய் சேர்ந்துள்ளது. பிரபல அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் போய் சேர்ந்திருக்கிறது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவுக்கு 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளியும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் இந்த ஊழலில் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ராசாவுக்கு கிடைத்த தொகையை துபாய் உள்பட அரபு நாடுகள் மற்றும் லண்டனில் உள்ள தனது மனைவி பரமேஸ்வரி வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடி கிடைத்தது என்று அவரது நண்பரும் முக்கிய பிரமுகருமான ஒருவர் தெரிவித்துள்ளார். சாதிக்பாட்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் 10 நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு ரூ.ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் சாதிக்பாட்ஷா கூறியதாக அந்த முக்கிய பிரமுகர் கூறினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஹவாலா ஊழலில் கிடைத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஆ.ராசா மூடி மறைக்க சாதிக்பாட்ஷா மிகவும் உதவினார் என்று டெக்கான் குரோனிக்கலுக்கு அளித்த பேட்டியிலும் அந்த முக்கிய பிரமுகர் கூறியுள்ளார். இந்த முக்கிய பிரமுகரும் பெரம்பலூரைச் சேர்ந்தவர். மேலும் இவர் இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் என்றும் கூறப்படுகிறது. சாதிக்பாட்ஷா என்னுடன் தொலைபேசியில் பேசும்போது, சி.பி.ஐ. விசாரணையில் அப்ரூவராக மாறும்படி தனது மனைவி வற்புறுத்துவதாகவும் அப்படி அப்ரூவராக மாறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவித்தார். அதேசமயத்தில் அப்ரூவராக மாறக்கூடாது என்று ராசாவுக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ரம்ஜான் பண்டிகையை சாதிக்பாட்ஷா மிகவும் விமர்சையாக கொண்டாடியதாகவும் ஒரு மிகப்பெரிய விருந்து வைத்ததாகவும் பெரம்பலூர் மக்கள் கூறுகிறார்கள். அந்த விருந்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களையும் சாதிக்பாட்ஷா அழைத்ததாக சாதிக்பாட்ஷாவின் நண்பர்களில் ஒருவர் கூறினார். பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. புவனேஸ்வரி தேவராஜனுக்கு சாதிக்பாட்ஷாவை நன்றாக தெரியும். சாதிக்பாட்ஷா மிகவும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வார் என்றும் முகேஷ் அம்பானி மாதிரி ஒரு பெரும் தொழிலதிபராக வர வேண்டும் என்றும் அதேசமயத்தில் மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும் என்றும் சாதிக்பாட்ஷா விரும்பியதாக புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சாதிக்பாட்ஷாவிடம் குறைந்தது 100 குடும்பத்தினர் பணிபுரிந்தனர் என்பது சாதிக்பாட்ஷாவுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.