முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டு வேட்டைக்கான பரிசுத்தொகை மேலும் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், மார்ச்.- 5 - ஆந்திரமாநிலத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் முதல் உறுப்பினர்கள் வரையில் ஒவ்வொருவரது தலைக்கும் விலையை அம்மாநில அரசு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மாவோயிஸ்டு மத்திய குழு உறுப்பினர்களான கணபதி(எ) முப்பல்ல லட்சுமண ராவ், மல்லோஜூல வேணுகோபால் ஆகியோரது தலைக்கு ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவோயிஸ்டு மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்களின் தலைக்கு தற்போது ரூ12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளது. மாநிலக்குழுவில் இடம்பெற்றுள்ள மாவோயிஸ்டு களின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தொகை ரூ.10 லட்சம் இனி ரூ.15 லட்சமாகவும், மண்டலக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8லட்சம் இனி ரூ.10 லட்சமும், மாவட்ட கமிட்டி செயலாளர்கள் தலைக்கு முன்பு ரூ.5 லட்சம் இனி ரூ.8லட்சமாகவும், கொரில்லா கமாண்டர்களுக்கு ரூ. 2லட்சம் இனி ரூ.3லட்சமாகவும், துணை கமாண்டர்களுக்கு ரூ.1 லட்சம் இனி ரூ.2லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் அவர்களுக்கு இந்த தொகையும் அல்லது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டால் தகவல் கொடுத்தவருக்கும், சுட்டுக்கொன்றவருக்கும் இத்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரஙகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கான பரிசுத்தொகையை மத்திய அரசு அதிகரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இலகுரக துப்பாக்கிகளுக்கு ரூ.5லட்சமும், ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஒப்படைப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்