முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அல்போன்சாவின் காதலர் மர்மச்சாவு...!

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலர் அல்போன்சாவின் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி விபரம் வருமாறு:-

பாட்சா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றவர். சமீப காலமாக அவர் கவர்ச்சி நடனங்களை குறைத்துக் கொண்டு வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவனை விட்டு பிரிந்துவாழ்கிறார்.

இவரும் கல்பாக்கத்தைச்  சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத் குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். நடிகர் முரளி தயாரித்த கவசம் என்ற படத்தில் கதா நாயகனாக நடித்துள்ளார். படம் இன்னும் வெளி வரவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் ஒரு அபார்ட் மெண்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு துபாய் கலைநிகழ்ச்சியை முடித்து விட்டு அல்போன்சா விருகம்பாக்கம் வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு அல்போன்சாவிடம் வினோத்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது அறைக்கு வினோத்குமார் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பிறகு அல்போன்சா வினோத்குமாரின் அறைக்கு சென்ற போது வினோத்குமார் தூக்கிய தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அபார்ட் மெண்ட் காவலாளியிடம் கூறியுள்ளார். அபார்ட் மெண்ட் காவலாளி அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வந்து உடலை கைப்பற்றி உள்ளனர். இதற்கிடையில் உடலை இறக்கி கார்பார்க்கிங்கில் வைத்திருந்ததாக  கூறப்படுகிறது. இது பற்றி அல்போன்சா கூறுகையில் தன்னை வினோத்குமார் திருமணம் செய்யும் படிவற்புறுத்திதாகவும் தான் முதல் கணவரிடம் பிரச்சனை எற்பட்டு பிரிந்து வாழ்வதால் முறைப்படி விவாகரத்து பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாகவும், ஆனால் வினோத்குமார் அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னிடம் வாக்குவாதம் செய்துவிட்டு அறைக்கு சென்றதாகவும் அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதகாவும் கூறியுள்ளார். 

சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில்

அல்போன்சா துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார்.  துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. பிறகு போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.  ஆனால் உறவினார்கள் திட்டியதால் மனமுடைந்த அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு  சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக  விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவருக்கு நினைவு திரும்பிய பிறகுதான்

விசாரிக்க முடியும். அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்று தந்தை பாண்டியன் தெரிவித்தார்.

அல்போன்சாவும், அவரது ராபர்ட்ராஜும் சேர்ந்து வினேத்குமாரை கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக அவரது மாமா காவல்துறையினர் புகார் அளித்துள்ளார்.வினோத்குமார் மாமா சுகுமாறன் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், எனது மைத்துனர் பாண்டியன் புதுப்பட்டினத்தில் வசித்து வந்தார். அவரது மூத்த மகன் வினோத்குமார். 25 வயதான அவர் கவசம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக வளசர வாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்தார். நடிகை அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ராஜ் இருவரும் வினோத்குமாருடன் நெருங்கி பழகியுள்ளனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வினோத்குமாரை அழைத்து வந்து அல்போன்சா இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். வினோத்குமார் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே அவரை மயக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதற்கு வினோத்குமார் மறுத்ததால் அல்போன்சாவும், ராபர்ட்ராஜும் சேர்ந்து அவரை தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள வினேத்குமாரின் உடலை பார்ப்பதற்காக வந்த அவரது தந்தை பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,அல்போன்சாவும், அவரது பெற்றோரும் என் மகனை அடித்துக் கொன்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

பரபரப்பான இந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவிலும் அல்போன்சாவிடம் நடத்தும் விசாரணை மூலமே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்