முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்களுக்கு தடை இல்லை

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.7 - சங்கரன் கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் பங்கேற்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற வக்கீல் மகாவீர சிவாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இது தேர்தல் நன்னடத்தை விதிக்கு எதிரானதாகும். சங்கரன் கோவிலுக்குள் அமைச்சர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடியும் வரை அந்த தொகுதிக்குள் அமைச்சர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் விசாரித்து, இதில் முடிவு எடுக்க தேர்தல் கமிஷனுக்கு தான் அதிகாரம் உள்ளது. கோர்ட் தலையிடமுடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்