எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.7 - தமிழர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி படுகொலை புரிந்த இலங்கையை போர்க் குற்றவாளியாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை போரின் இறுதி தருணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது தாக்குதலை தொடுத்து கொடூரமான சித்தரவதை நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் நடத்தியது. இந்த போர்குற்றம் தொடர்பாக ஐ.நா. ஒரு மனித உரிமை குழுவை நியமித்து ஆய்வு செய்தது. அதன் அறிக்கை ஏற்கனவே ஐ.நா.வின் மனித உரிமை கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிங் கூட்டம் ஜெனீவாவில் இம்மாதம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு நடத்திய போர்க்குற்ற நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எதிர்த்து செயல்பட உள்ளன.
இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இந்த கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு ஏறக்குறைய 80 சதவீத நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்தியா இவ்விஷயத்தில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக கருத்து தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள இலங்கை அமைச்சர் இந்தியா எங்களை ஆதரிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இச்சூழ்நிலையில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்தியா செயல்பட உள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இச்சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதத்தை நேற்று எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தங்களுக்கு கடந்த 14.6.2011 அன்றும் 25.6.2011 அன்றும் எழுதிய கடிதத்தை நினைவு கூற விரும்புகிறேன். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8.6.2011-ல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்கள் மீது போர்க்குற்றம் இழைத்தற்காக அதைக்கண்டித்தும், ஐ.நா.வில் கொண்டு வரவுள்ள போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளித்து, மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி உள்ளேன். சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களை மறு குடி அமர்த்தி, மறு சீரமைத்து புதிய வாழ்க்கையை அவர்களுக்கு கெளரவமாக அளிக்கவும், சிங்களவர்களுக்கு இணையாக அரசு சட்ட உரிமைகளை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்கும் படி நான் அந்த கடிதத்தில் கூறியிருந்தேன்.
ஆனால் சமீபத்தில் மாறுபட்ட செய்திகள் வந்துள்ளன.
ஜெனீவாவில் கூடும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்குப்பதில், வழக்கமாக நடக்கும் நடைமுறையின் படி, உலகளவிலான, விஷயங்களை ஆய்வு செய்யும் பிரிவில் ஒன்றாகவே இலங்கை விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுவதாக ஊடக செய்திகளிள் அடிபடுகின்றன. இந்தியாவின் இத்தகைய செயலானது இலங்கையை இந்தியா நேரிடையாக ஆதரிப்பதாகவே கருதே வேண்டியுள்ளது. இந்தியாவின் இந்த செயல் துர திஷ்ட வசமானதாகும்.
ஆகையால் நான் ஏற்கனவே வலியுறுத்தியது போல மனித உரிமைக்கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்க பின்னணியில் உள்ள தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரித்து இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்விஷயத்தில் உடனடியாக தங்களின் மேலான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.