முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுவிற்கு ஆதரவாக நடிகர் - நடிகைகள் பிரச்சாரம்

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோவில்.மார்ச்.7 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நடிகர் நடிகைகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட நக்கலமுத்தன்பட்டி, சிப்பிப்பாறை, கொடப்பாறை, முக்கூட்டுமலை, திருவேங்கடம் பகுதிகளில் அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும் திரைப்பட இயக்குநருமான நம்பிராஜன் தலைமையில் நடிகை குயிலி, நடிகர் செந்தில் , ஜெயசூர்யகாந்த், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், வசனகர்த்தா லியாகத் அலிகான் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தில் குயிலி கூறும் போது ஜெயலலிதா என்ற பெயருக்கு ஏற்ப சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் அனைத்திலும் வெற்றிதான். அவர் தனக்காக வாழாமல் 24நான்கு மணி நேரமும் தமிழக மக்களுக்காகவே வாழ்கிறார். அவரின் சீரிய திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். செந்தில் பேசும் போது கூடன்குளம் பிரச்சனைக்கு விரைவில் நல்ல தீர்வை முதல்வர் எடுப்பார். கருணாநிதியால் தான் தமிழ்நாட்டிற்கு இந்த கரண்ட் பிரச்சனை. அதுவும் இந்த தேர்தலுக்கு பின்னர் முடிவுக்கு வந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் தனபால் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர். நடிகர் நடிகைகளின் இந்த பிரச்சாரத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு காணப்;பட்டது. அனைத்து ஊர்களிலும் காத்திருந்து வரவேற்னர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்