எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.7 - செல்போன் வியாபாரியின் வழக்கை நேர்செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ராஜனை சி.பி.ஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனராக பதவி வகிப்பவர் ராஜன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சுங்க இலாக்காவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் சுங்க இலாகா உயர்அதிகாரியாக பதவி வகித்தவர்.
பின்னர் பதவி பெற்று வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றார். அடிக்கடி சென்னையில் செம்மரக்கட்டைகள் கடத்தல் , போதை மருந்து கடத்தல் போன்றவற்றை அவர் தலைமையில் அதிகாரிகள் பிடித்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராஜன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சி.பி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்அவரை அவர் வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரது கார் ஒட்டுநர் முருகேசன் என்பவரையும் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஐபேடு மற்றும் ரூ.2 லட்சம் பணம் லஞ்சமாக பெற்றதாக ராஜன் மீது சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இவற்றை ராஜன் வீட்டில் அவரது டிரைவர் வாங்கும் போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று கையும் களவுமாக பிடித்தனர்.
ராஜன் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் சுங்க இலாக்கா அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜன் சென்னையில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்பு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் மத்திய அரசு துறைகளை சேர்ந்த பாஸ்போர்ட் அதிகாரி,தபால் அதிகாரி,இமிகிரேசன் அதிகாரி துறைமுக அதிகாரிகள் சி.பி.ஐ நடத்திய லஞ்ச வேட்டையில் சிக்கியுள்ளனர்.இதனையடுத்து சி.பி.ஐ பிடியில் சிக்கிய முக்கிய அதிகாரி ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.ராஜன் கைது குறித்து சி.பி.ஐ வட்டாரத்தில் கூறியதாவது:- சென்னையை சேர்ந்தவர் உபயதுல்லா, தொழிலதிபர்.இவர் வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்து சென்னையில் விற்பனை செய்து வந்தார்.மொத்தமாக வியாபாரியான உபயதுல்லா தொழில் ்நிமித்தமாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கம்போல் மொத்தமாக செல்போன்களை இறக்குமதி செய்தார் உபயதுல்லா. அப்போது, வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் ராஜனிடம் அவர் சிக்கிக் கொண்டார். அவர் மிறைகேடாக செல்போன்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். உபயதுல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து எப்படி விடுபடுவது முடங்கிய வங்கி கணக்கு செயல்படுத்துவது என தெரியாமல் உபயதுல்லா தவித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குநர் ராஜன், உபயதுல்லா வழக்கில் இருந்து விடுபட பேரம் பேசினார்.ரூ.8 லட்சம் பேரம் பேசி முதல்கட்டமாக ரூ.2 லட்சம் பணமும், ஒரு ஐபேடும் தனக்கு லஞ்சமாக கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.இதுபற்றி உபயதுல்லா அளித்த புகாரின்பேரில் ரசாயன பவுடர் தடவிய நோட்டை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உபயதுல்லாவிடம் கொடுத்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் உள்ள ராஜனின் வீட்டிற்கு உபயதுல்லா சென்றார். அங்கு தயாராக இருந்த ராஜனின் கார் ஓட்டுநர் முருகேசன் உபயதுல்லாவிடம் இருந்து ரூ.2.லட்சம் மற்றும் ஐ பேடை ராஜன் சார்பில் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ.அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர். இவ்வாறு சி.பி.ஐ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.கைதான வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ராஜனுக்கு ஒருவரை காபிபோசா சட்டத்தில் அடைக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் ஊழல் செய்த சுங்க அதிகாரிகளை சி.பி.ஐ.யிடம் பிடித்துக் கொடுக்க உதவிய சிலரையும் இவர் வேண்டுமென்றே காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ய முயன்றதாக வழக்குகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி சி.பி.ஐ தரப்பில் அவரது வீட்டை சோதனையிட்டதாகவும் அப்போது ரூ.11 லட்சம் மற்றும் 32 லட்சம் பிக்ஸட் டெபாசிட் ஆவணங்களும் சிக்கியதாக கூறப்பட்டது. தன்னை கைது செய்ததும் நீதிபதி அசன் அலியிடம் ஜாமீன் கேட்டு ராஜன் விண்ணப்பித்தார் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மார்ச் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.