எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.9 - அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு முடிவு எடுத்து அரசு ஆணை வெளியிட்டது. இந்த நூலககட்டிடத்தில் குழந்தைகள் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவருவதாகவும், இங்குள்ள நூலகமானது நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கட்டப்படும் ஒருங்கிணைந்த அறிவுசார் ங்காவிற்கு மாற்றப்படும் என்றும் அரசு உத்தரவிட்டது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புகழேந்தி, ஆர்.பிரபாகரன், மனோன்மணி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில் பள்ளி, கல்வித்துறை செயலாளர் சபிதா பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் ங்கா கட்டப்பட உள்ளது. இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. அறிவுசார் ங்காவில் அமையவிருக்கும் நூலகத்தின் மூலம் இக்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பயன்பெற முடியும் மேலும் டி.பி.ஐ. வளாகம் நகரில் மத்தியில் அமைத்துள்ளது.
கோட்டூர்புரம் நூலகத்தை நகரில் உள்ள மொத்த கல்வி நிலையங்களில் 8 சதவீதம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன.
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து செல்லும் வாசகர்களின் எண்ணிக்கை கன்னிமாரா நூலகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
மேலும், நகரில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளில் அமைந்துள்ளன. தென் சென்னை பகுதியில் அரசு மருத்துவமனை கிடையாது. ஆகவே, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் அரசு, குழந்தைகள் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற எடுத்த முடிவு சரியானதே! எம்.ஜி.ஆர். மருத்துவ பல் கலைக்கழகம் அருகில் இந்த மருத்துவமனை அமையப்பெறுவது பொருத்தமானது. அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மிகப்பெரியது. ஆனால், குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நூலகத்திற்கு உள்ளூர் நூலக நிதி எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நிர்வாகிக்க மாதந்தோறும் ரூ.50 லட்சம் செலவாகிறது. இந்த கட்டிடத்தை முழுவதுமாக பயன்படுத்தினால் மாதம் ரூ.1 கோடி செலவாகும். சென்னையில் உள்ள அரசு நூலங்களை நிறுவகிக்கவே மாதந்தோறும் ரூ.1 கோடி மட்டுமே செலவாகிறது. இந்த நூலக கட்டிடத்திற்கு இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.10 கோடி கட்டப்படுகிறது. அரசுக்கு இது வீண் செலவாகும். மொத்த பரப்பளவு 3 லட்சம் சத்து 48 ஆயிரத்தி 480 சதுர அடியில் வெறும் 41 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பளவு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதி இடப்பரப்பளவு காலியாகவே உள்ளது.
நூலக கட்டிடத்தில் சம்பந்தம் இல்லாமல் பல அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. நூலக பயன்பாடு தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு இங்குள்ள கூட்டு அரங்குகள் பயன்படுத்தப்படுகிறது. இது வாசர்களுக்கு இடையூராக உள்ளது. இங்குள்ள உணவு விடுதிகளில் விற்கப்படும் திண்பட்டங்களின் விலை நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியானதாக இல்லை. இந்த நூலகம் கட்டியதில் தமிழ்நாடு நூலக சட்டம், தேசிய பொது நூலக சட்டம் ஆகியன வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. நூலகத்தை இடமாற்றம் செய்வது என அரசு எடுத்த முடிவு, கொள்கை முடிவு .
ஆகவே, இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் நீதித்துறை விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.