முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு உதவி

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.9 - சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சரஸ்வதி பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் 7​3​2012 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் அய்யனார் காலனியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகன் கணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த கணபதியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்வெடி விபத்தில் சரஸ்வதிபாளையத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் நடராஜன் படுகாயம் அடைந்துள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர் விரைவில் nullரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கணபதியின் குடும்பத்திற்கு

ரூ. 1 லட்சமும், பலத்த காயம் அடைந்த நடராஜனுக்கு ரூ. 25 ஆயிரமும் முதல்​அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்​அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்