முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.10 - அரசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த இருவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் கிராமம், பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் 7.3.12 அன்று இருசக்கர வாகனம் மீது, மதுரையிலிருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மேலகுருவாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் திருச்செல்வன் பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், சிங்கபெருமாள் கோயில், ஜி.எஸ்.டி சாலையில் 7.3.12 அன்று இருசக்கர வாகனம் மீது மறைமலைநகரிலிருந்து செங்கல்பட்டு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மறைமலைநகர், கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இவ்விரு சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த திருச்செல்வன் மற்றும் சாம்பசிவம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்துக்களில் உயிரிழந்த திருச்செல்வன் மற்றும் சாம்பசிவம் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிராரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்