முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் விஜயகாந்தை விரட்டியடித்த பெண்கள்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை, மார்ச் 14 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற விஜயகாந்தை பெண்கள் விரட்டியடித்தனர். சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2 தினங்களாக சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட தர்மத்தூரணிக்கு பிரச்சாரம் செய்ய சென்றார். இதற்கிடையே தேர்தலையொட்டி இப்பகுதி கிளைச் செயலாளராக இருந்த பரமன் என்பவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார். இதனால் பரமன் ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் விஜயகாந்த் இங்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் அவர்களை பார்த்து நாக்கை துறுத்தி எச்சரித்தார். இதை சட்டை செய்யாத பெண்கள் மீண்டும் விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதைப்பார்த்த பிரச்சாரத்தில் இருந்த தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் பெண்களை பார்த்து அமைதியாக இருங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் நான் பேசிக்கொண்டிருக்கும் போது நீ எப்படி சொல்லலாம் என்று அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர் நொந்துபோனார். இச்சம்பவங்களையடுத்து அத்துடன் பிரச்சாரத்தை அப்பகுதியில் முடித்துவிட்டு வேறு இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்