முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி கற்பழித்து கொலை: காமகொடூரனுக்கு 3 ஆயுள்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மார்ச்.14 - 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த காம கொடூரனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 70 அபராதமும் விதித்து ஊட்டி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பில்லிக்கம்பை பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ். கூலிவேலை செய்து வரும் இவரது மகள் ஜனனி(6).அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 29-9-2009 அன்று பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன் என்பவரது மகன் மணிகண்டன்(25), ஜனனியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜனனி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து அவன் மீது ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி பிரேம்குமார், குற்றவாளி மணிகண்டனுக்கு கற்பழித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், பெண்களை வன்கொடுமை செய்தமைக்காக ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 3 ஆயுள் தண்டனையும், 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் வாதாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்