முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தாரி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது: கிலானி

புதன்கிழமை, 21 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மார்ச். - 21 - சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது கிலானி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானில் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கை பிரதமர் கிலானி அரசு மீண்டும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிலானி அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடுத்துள்ளது. இதனையடுத்து கிலானி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். முன்னதாக, சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை விசாரணைக்கு ஏதுவாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் அவர் முதலீடு செய்த பணம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதி அறிய வேண்டும் என்று கிலானிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  மேலும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து கிலானி நேற்று தனது விளக்கத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த கடிதத்தில் சர்தாரி மீதான ஊழல் புகாரை மீண்டும் விசாரிக்க முடியாது. அது குறித்து சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதவும் முடியாது. இது அரசியல் சட்ட மரபுகளை மீறுகிற செயலாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரதமர் கிலானியின் பதவிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்