முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூரில் பகத்சிங் நினைவஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லாகூர், மார்ச். 25 - இந்தியாவின் வீரமிக்க இளைஞர்களின் முன்னோடியாக திகழ்ந்த பகத்சிங்கை பாகிஸ்தானும் கவுரவிக்க வேண்டும் என உலக பஞ்சாப் காங்கிரஸ் என்ற பாகிஸ்தான் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய 3 இளைஞர்களும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட நாள் கடந்த 23 ம் தேதியாகும். 1931 ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ம் தேதியில் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டு லாகூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்ட சிறைச்சாலை இப்போது சத்மான் சவுக் என அழைக்கப்படுகிறது. இந்த உடத்தில் உலக பஞ்சாப் காங்கிரஸ் அமைப்பினர் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். 

இந்தியா, பாகிஸ்தான் ஒன்றாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் பாகிஸ்தான் அரசு கவுரவிக்க வேண்டும். எனவே இந்த இடத்திற்கு பகத்சிங் சவுக் என பெயரிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்