எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.31 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் சார்பாக பசுப்பட்டி தோப்பில், 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடம் மற்றும் செம்மடம் தோப்பில் மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை, பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு அருகில் பசுப்பட்டி தோப்பில் 63,400 அடி பரப்பளவில் திருக்கோயில் நிதி 67 லட்சத்து 30 ஆயிரமும், சுற்றுலாத் துறை நிதியுதவி 24 லட்சமும் சேர்த்து மொத்தம் 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கான்கிரீட் தளம், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, உயர்கோபுர மின் விளக்குகள் ஆகிய வசதிகளுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் மற்றும் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான செம்மடம் தோப்பில் 3 கிணறுகளும், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் நிறுத்துமிடம் உபயோகத்திற்கு வருவதன் மூலம் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படுவதோடு வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளும், மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டியும் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தூய்மையான குடிநீர் பெறுவதோடு பக்தர்களின் ண்ட நாள் கோரிக்கையும் ர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், பக்தர்கள் பயணியர் நிழலகம், திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், இரண்டு குளியல் தொட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், நாழிக்கிணற்றின் கிழக்கு பகுதியில் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவற்றை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக 86,080 சதுர அடி பரப்பளவில் 72 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், 59,180 சதுர அடி பரப்பளவில் 38 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் பக்தர்கள் பயணியர் நிழலகம், 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், 31 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத்துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு அருகே இரண்டு குளியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 38 கழிப்பறைகளும், பெண்களுக்கு 38 கழிப்பறைகளும், நாழிக்கிணறு அருகில் கிழக்குப் பகுதியில் 87,156 சதுர அடி பரப்பளவில் 87 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக அமைக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்து நிலையம், பயணியர் நிழலகம், உயர்கோபுர மின்விளக்குகள், குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஆகியவை இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பிற்கும், வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக அமைவதோடு திருச்செந்தூர் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து குலசேகரபட்டினத்தைச் சேர்ந்த பக்தர் முத்தரசு பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முருக பக்தன். நான் அடிக்கடி சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் வருவேன். முதல்வர் ஜெயலலிதா பக்தர்களுக்காக சுற்றுலா பேருந்து நிலையம், பயணிகள் தங்க நிழற்கூடம், குளியலறை வசதி என்று ஏகப்பட்ட வசதிகளை பக்தர்களாகிய எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார்கள். இதனால் பக்தர்கள், குறிப்பாக என்னைப்போன்ற வயதான பக்தர்கள் மகிழ்ச்சியா, மனநிறைவோட சுவாமி தரிசனம் பண்ண முடிகிறது. அதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய உளங்கனிந்த நன்றியினை பக்தகோடிகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மழை பெய்கின்ற மாதிரி, மக்களுக்கும் சரி, பக்தர்களுக்கும் சரி ஏராளமான நன்மைகளையும், நலத்திட்டங்களையும் வாரி வழங்குகின்ற முதல்வர் ஜெயலலிதா பலகோடி நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவருளை, திருவடியை வேண்டுகிறேன்.
இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், களப் பணியாற்றும் ஆய்வாளர்கள் ஆகிய 560 அலுவலர்களுக்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 560 மடிக்கணினிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், ஏழு அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் மூலம் திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வைக்கவும், உடனுக்குடன் அரசுக்கு தேவையான விவரங்களை அளிக்கவும், அலுவலக உபயோகத்திற்கும் இந்த மடிக்கணினிகள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.