முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 8 - பணியிலிருக்கும்போது மரணமடைந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த என்.குணசேகரன் 5.4.12 அன்று பணியிலிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் பணியிருக்கும்போது காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. குணசேகரனின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடமையாற்றிக் கொண்டிருந்தபோது காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரனின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்