எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருப்புக்கோட்டை ஏப்ரல் - 07 - அருப்புக்கோட்டையில் 4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்ட அமைச்சர் சண்முகம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அருப்புக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் பட்டாபிராமர் கோவில் தெருவிலும், முன்சீப் கோர்ட் பிள்ளைமார் தெருவிலும், குற்றவியல் நீதிமன்றம் பந்தல்குடி சாலை தாலுகா அலுவலக வளாகத்தில் தனி தனியாக செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லும் போது அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை பொதுமக்கள். வழக்கறிஞர்கள். வர்த்தக அமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகள் சார்பாக ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் கீழ் அரசு உத்தரவின் படி மதுரை சாலை கால்நடை மருத்துவமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசு சுமார் 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மூன்று நீதிமன்றங்கள், மூன்று நீதிபதிகள் குடியிருப்புகள், கைதிகள் அறை, நூலகம், வங்கி, வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள், ஊனமுற்றோருக்கு தனித் தனியாக லிப்ட் வசதிகள் மற்றும் பல வசதிகளுடன் அதி நவீன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. புதியதாக சுமார் 4 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அதன் பின் திறப்பு விழா நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சட்ட அமைச்சர் சண்முகம் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவதாஸ், விஐயராகவன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விருதுநகர் மாவட்ட நீதிபதி கிருஷ்;ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்து பேசினார். விழாவில் சட்ட அமைச்சர் சண்முகம் பேசியதாவது தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஒரு மாதத்தில் மூன்று நீதிமன்ற வளாகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடம், கட்டிடப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தடைபட்டு இருந்தது. முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி கட்ட உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து கூடுதல் நிதியால் நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சியல் நீதி துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஒரு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் நீதி துறைக்கு நல்ல கட்டிடங்கள் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான நீதிமன்ற கட்டிடங்கள் சொந்த கட்டிடங்களாகவே உள்ளது. நமது முதலமைச்சர் அவர்கள் நீதிதுறைக்கு தனி மரியாதை கொடுத்துள்ளார். நீதித் துறையில் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ யாரும் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார். முன்பு உயர்நீதிமன்றம் சென்னையில் மட்டும் தான் இருந்தது. கன்னியாகுமரி மற்றும் தென் மாநிலத்திலிருந்து உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு பண வரையம், கால வரையம் ஏற்பட்டது. கடந்த அம்மா ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் 88 கோடி செலவில் உயர்நீதி மன்ற கிளை துவங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இதை நிரந்தரமாக்கப்பட வேண்டும், நிரந்தர மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையும் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் 49 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான் நீதி துறையில் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. நில அபகரிப்புகளை விசாரிப்பதற்காக தனியாக நில அபகரிப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்து வருகிறது. 25 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதிகள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதித் துறையின் மூலம் எந்தெந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதோ அதை அனைத்தையும் அம்மா அரசு நிறைவேற்றியுள்ளது. ஆவன காப்பகம் வேண்டுமென்று கூறியுள்ளதை ஏற்று அரசு ஆணை ஆவணக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை உடனடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றுவோம் என்றார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜயராகவன், தேவதாஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி பரமராஜ், மாவட்ட ஆட்சியாளர் பாலாஜி, பார் கவுன்சிலர் உறுப்பினர் இராஜராஜன், அருப்புக்கோட்டை பார் கவுன்சிலர் தலைவர் செல்லையா, செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர். விருதுநகர் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்தனர். விழாவில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஜெசீந்திரா மார்டின,; குற்றவியல் நீதிபதி கணபதி சாமி, முன்சீப் நீதிபதி மகாலட்சுமி, விருதுநகர் சார்பு நீதிபதி லியாகத் அலிகான், குற்றவியல் நீதிபதி சசிரேகா, முன்சீப் நீதிபதி அமிர்தவேல், சாத்தூர் முன்சீப் நீதிபதி முத்துக்குமார், குற்றவியல் நீதிபதி சுபத்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லத்துறை, முன்சீப் நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மேகலா மைதிலி, சிவகாசி சார்பு நீதிபதி சுமதி, குற்றவியல் நீதிபதி சம்பத் குமார், முன்சீப் நீதிபதி ஜெயசுதா, இராஜபாளையம் குற்றவியல் நீதிபதி அனில்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அருமைநாயகம் வரகுணராஜ், நாடார் உறவின் முறைத் தலைவர் மனோகரன், ஜெயவிலாஜ் தொழிலதிபர் தினகரன், பஸ் உரிமையாளர் மகாலிங்கம், மின்செயற் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், லதா, எஸ்.எஸ்.கே தொழிலதிபர் சங்கரலிங்கம் மற்றும் நீதிதுறையைச் சேர்ந்த அலுவலர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து