முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை 15ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 9 - மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடலில் மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்காலம் வருகிற 15ந் தேதி முதல் தொடங்குகிறது. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு சாதகமான காலம் என்று ஏப்ரல் ,மே மாதங்களை கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாட்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு,குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்யும். எனவே கடலில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.இந்த நாட்களில், ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க விசை படகுகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் கரையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீன் பிடிக்கும் கட்டுமரம் மற்றும் பைஃபர் படகுகளுக்கு அனுமதி உண்டு. இதனால் தடை காலமான 45 நாட்களும் விசைபடகுகள் அனைத்தும் கடற்கரையில் ஓய்வெடுக்கும். இந்த ஆண்டு மீன்தடை காலம் வரும் 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. தற்போது வாரக்கணக்கில்  கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் விசை படகுகள் விரைவில் கரைக்கு திரும்ப உள்ளன. இந்த தடைகாலம் மே மாதம்  29ந் தேதி வரை நீடிக்கீறது.  தமிழகம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது. சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் விசை படகுகள் கரையில் ஓய்வு எடுக்கும். ஆனால் கடலில் 30 கிலோ மீட்டர் வரை சென்று கட்டுமரம் மற்றும் பைஃபர் படகுகள் மூலம் மீன் பிடிக்க அனுமதி உண்டு .  மீன் பிடிக்க தடைக்காலத்தில் குறைந்த அளவு மீன்களே பிடிக்கப்படுவதால் தமிழக மீன் தேவைக்கு கர்நாடாகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் மீன் விலை உயர வாய்ப்பு உள்ளது.  அதே நேரத்தில் மீன் பிடி தடை காலத்தில் ஓய்வில் இருக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்