முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 12-ந் தேதி பிளஸ்​-2 தேர்வு முடிவு வெளியாகிறது

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.25 - பிளஸ்​2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 8​ந்தேதி தொடங்கி மார்ச் 30​ந்தேதி முடிவடைந்தது. 8.5 லட்சம் மாணவ​ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.   மதிப்பெண்கள் டேட்டா சென்டரில் பதிவு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அந்த பணி மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிளஸ்​2 தேர்வு முடிவுகள் மே 9​ந்தேதி வெளியானது. இந்த ஆண்டு மே 12​ந்தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.   இதற்கிடையில் தமிழகத்தில் பிளஸ்​2 தேர்வின்போது மின்வெட்டு காரணமாக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதனால் விடைத்தாள் திருத்தும் பணியில் கடுமை காட்டக்கூடாது என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித்துறை விதிமுறைகள் எப்போதும்போல கடைபிடிக்கப்படுவதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்