முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகால மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இரங்கல்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஓ.எல்.செல்லையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், விருதுநகர் மாவட்டம், செட்டியார்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் டி.தங்கசாமி சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன். 

ஆரம்ப கால அ.தி.மு.க. உடன் பிறப்புகளான செல்லையா மற்றும் தங்கசாமி ஆகியோருடைய கட்சிப் பணிகள் பாராட்டுதலுக்குரியதாகும். 

அன்புச் சகோதரர்கள் செல்லையா, தங்கச்சாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்