முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் திடீர் மழை: மக்கள் பெரும் மகிழ்ச்சி

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்,25  - மதுரையில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து மதுரையில் கோடை வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் வேலூரை அடுத்து மதுரையில்தான் அதிக வெயில் அடித்தது. இந்த கோடை வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரையில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடிக்காமல் இருந்தது. மதியத்திற்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த மழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. வாகன ஓட்டிகள் இந்த தண்ணீரில் சிக்கி செல்ல முடியாமல் தவித்தனர். தொடர்ந்து வெப்பத்தால் தவித்து வந்த மதுரை மக்களுக்கு நேற்று பெய்த மழை குளிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்