எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி ஏப் - 26 - போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று ஆண்டிபட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் தா. பாண்டியன் பேசினார். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட பொருளாளர் எஸ். கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெ. தங்கம் முன்னிலை வகித்தார். முாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சி.பி.ஐ. மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது - ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியில் கடந்த 7,8 ஆண்டுகளாக ஏழை விவசாய கூலிகள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபிறகும் அதிகாரிகள் இழுத்தடிப்பது நியாயமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கான வீட்டு மனைபட்டாவை பெற்றேதீரும். அதிகாரிகள் அந்த 100 விவசாய கூலிகளுக்கு பட்டா வழங்கியே தீரவேண்டும். விலகி நீன்றால் கண்துடைப்பு என்று கருதவேண்டிவரும். மேலும் அவர் இந்தியாவில் புழங்கும் பணம் கொங்சம் நஞ்சமல்ல தொழிற்சாலைகளில் 100 கோடி லாபம், வங்கிகளில் பலகோடி லாபம், நெய்வேலியில் லாபம், நிலக்கரி சுரங்கத்தில் லாபம், ரயில்வே துறையில் பலகோடி லாபம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி பேரில் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் பலகோடிபேர் உள்ளனர். பட்டினி கிடப்போர் கோடிக்கணக்கில் உள்ளனர். இன்று கிரிக்கெட் விளையாடும் ஒருவருக்கு 3 கோடி முதல் 9 கோடி வரை சம்பளம் தருகிறார்கள். அதைபடம் பிடித்து காட்டும் சோனிகம்பெனிக்கு 2500 கோடி லாபம். ஆனால் கங்கை கரையிலும் கோதாவரிக்கரையிலும் கரும்பு, வாழை, நெல் பயிரிட்டு கஷ்டப்பட்டு நமக்கு உணவுதரும் விவசாயிக்கோ 2 கோடிகடன் என்று சொல்கிறார்கள். மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் இருக்கிறவரை தான் கட்சிகள். கட்சிகள் மக்களை உயிரோடும், மானத்தோடும், நிம்மதியோடும் வாழ செய்யவேண்டும். சமீபத்தில் இந்திய அரசு விஞ்ஞான ரீதியாக கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகனை பறக்கவிட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானம் மக்களுக்காக என்ன செய்தது. குடிசையை மாற்றி வீடுகட்டி கொடுத்ததா? தண்ணீர் கொடுத்ததா? படிப்பு கொடுத்ததா? மக்களுக்கு பயன்தராத விஞ்ஞான வளர்ச்சி தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் இன்னொரு மோசமான சூழல் தற்போது கலெக்டரையும், எம்.எல்.ஏவையும் கடத்துகிறார்கள். காப்பாற்ற வந்த இருவரையும் சுட்டு கொள்கிறார்கள். நடந்தது என்ன, ஆசிவாசிகளுக்கு என்ன தெரியும் அவர்கள் குறைதீர்க்கப்பட்டதா? போஸ்கோவின் விருந்துக்கு செல்கிறவர்கள் சிந்திக்கவேண்டாமா? நல்ல காரியம் செய்யப்போய் கெட்டபெயரை உண்டாக்கிவிடுகிறது. தமிழ்நாட்டோடு பீகாரை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு மின்வெட்டுக்குபிறகும் ஜொலிக்கிறது. பீகாரிலோ பசிபஞ்சம், பட்டினி, இன்னும் சைக்கிள்ரிக்சாவும், எண்ணெய் தேய்க்காததலையும், சோளாமாவும், மிளகாயும் தின்று உயிர் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 10 கோடி. பீகாரின் வருமானம் வெறும் 600 கோடி பீகாரில் தான் கங்கை ஓடுகிறது. மாநிலங்களுக்கிடையே வித்தியாசம் 6 மாநிலங்கள் நன்றாக உள்ளது. 24 மாநிலங்கள் தரித்திரத்தில் உள்ளது. 6 மாநிலங்களிலும் 6 மாவட்டங்கள் தான் நன்றாக உள்ளது. நமது இந்தியர்களின் பணம் வெளிநாட்டில் 25 வங்கிகளில் 120 லட்சம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடி வருமானம் வரும் தமிழ்நாட்டிலே மிக்ஸி இலவசம், படிப்பு இலவசம், கரண்ட் இலவசம் எல்லாமே இலவசம் எனத்தரும்போது 120 லட்சம் கோடி வெறுமனே வெளிநாடுகளில் கிடக்கிறது. அதை திரும்ப பெற்றால் என்ன என கேட்டால் சட்ட சிக்கல் என்கிறார்கள்.
மேலும் அவர் பேசியது கெட்ட பின்பு ஞானி என்பார்கள் கலைஞர் இப்போது சொல்கிறார் தனித்தமிழ் ்ழம் வேண்டும் என்று 10 வருடம் கழித்துசொல்ல கூடாது. இலங்கையில் எங்கள் ரத்தம் மடியக்கூடாது என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராணுவத்தையும் அனுப்பி தளவாடங்களையும் அனுப்பி எங்கள் சொந்தங்களை கொன்று குவித்தபின் இன்று துாதுக்குழு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? முள்வேலியில் முடங்கிகிடக்கும் ்ழத்தமிழர்கள் முதலில் வெளியேற்றி குடியமர்த்து அதற்குப்பின் வருகிறோம் என்றல்லவா? இந்த காங்கிரஸ் சொல்லியிருக்கவேண்டும். கேபினட் அந்தஸ்தில் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் திமுகவிற்கு இது தெரியவில்லை. இன்று வீடு கட்டி கொடுக்கிறார்களாம். ஏற்கனவே இருந்த தமிழர்களின் வீடுகள் எங்கே? போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம். தமிழக அரசுக்கு வேண்டுகோள் பள்ளி, கல்லுாரிகள் தொடங்கும் நேரம் பள்ளி, கல்லுாரிகளுக்கான முறையான விதிமுறைகளின்படி அனுமதி வழங்கவேண்டும். முறையான கட்டண விபரங்களை டி.வி.யில் அறிவிப்பு செய்யவேண்டும். நிலத்திருடர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். மின்சாரத்தட்டுப்பாட்டை நீக்க இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பேசினார். முன்னதாக நடந்த மாவட்டகுழு கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.வி.கே. ஜீவா, மாவட்டதுணைச்செயலாளர் ரவிமுருகன், ஒன்றிய செயலாளர் பெருசு, ஒன்றிய துணைச்செயலாளர் ஞானம்மாள், வக்கீல் பாண்டியன், நிர்வாகிகள் மாரியம்மாள், தமிழ்செல்வன், சீனிமுத்து, ராமசாமி, சரவணன், மாரிமுத்து, சாலமன், பாலு, பிரவீந்திரன், அண்ணாமலை, எரோமியா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ