முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நக்சல்கள் இல்லை: முதல்வர் உறுதி

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 26 - தமிழகத்தில் நக்சலைட்டுகள் போன்ற தீவிரவாதிகள் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப் பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமைதியும், வளமும் கொண்ட நாடு பற்றி கம்பராமாயணத்தில் கம்பர் கூறியுள்ளார். அது போல ஒரு நாடு உலகில் இருப்பது போல தெரியவில்லை. ஒரு நாட்டில் வாழும் சமுதாயம் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இருந்தால் அங்கு தீவிரவாதம் உருவாகாது. 

மாவோயிஸ்டுகள் உருவாக வறுமையே முக்கிய காரணம். ஒடிசாவில் எம்.எல்.ஏ. ஒருவர் கடத்தப்பட்டதற்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் கடத்தப்பட்டதற்கும் வறுமைதான் காரணம். சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இருந்தால் மாவோயிஸ்டுகள் பிரச்சினை இருக்காது என்றார். அவருக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, 

பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுவது போல், நக்சலைட்டுகளும், தீவிரவாதிகளும் தமிழகத்தில் இல்லை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்