எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - மதுபான சில்லைரை விற்பனைக் கடைகளில் கணக்குகள் சரிவர பராமரிப்பதற்கு ஏதுவாக பில்லிங் இயந்திரங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
முதலமைச்சரின் ஆணைப்படி, கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் தீமைகளை பொதுமக்களுக்கு விளங்கிட விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். விழிப்புணர்வு பேரணிகள், தெருமுனை நாடகங்கள் மற்றும் கருத்தரங்குகள் மாநிலம் முழுவதும் இதற்கென நடைபெறும். சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.64 லட்சம் நிதி, நடப்பு ஆண்டில் ஒதுக்கப்படும்.
மேலும், மாநில அளவில், இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு ரூ.36 லட்சம் நிதி வழங்கப்படும். இவ்வாறு, சாராயம் மற்றும் மதுபான வகைகள் பருகுவதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மொத்தம் ரூ.1 கோடி செலவிடப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தொழிலைத் தொடராமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும், முதலமைச்சரின் ஆணைப்படி, இவ்வாண்டு ரூ.5 கோடி மறுவாழ்வு நிதி உதவி, மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் அக்குடும்பங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்து தங்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும். நிதி உதவி பெறக்கூடிய பயனாளிகளைத் தேர்தெடுக்க மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக முதுநிலை மேலாளர் மற்றும் உதவி ஆணையர் ( ஆயத்தீர்வை) ஆகியோர் அடங்கிய மறுவாழ்வு குழு செயல்படும்.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் எரிசாராயம் மற்றும் போலி மதுபானம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக எட்டு மதுவிலக்கு சோதனைச் சாவடிகள், வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்டியான்பேட்டை, திருவலம் மற்றும் மாதகடப்பார் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் பொன்பாடியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருவிநாயனபள்ளியிலும், ஈரோடு மாவட்டத்தில் ஆசனூரிலும், சென்னை மாநகரத்தில் மொண்டியம்மன் நகரிலும் புதிதாக அமைக்கப்படும்.
தமிழ் நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 7,785 மேற்பார்வையாளர்களும், 16,826 விற்பனையாளர்களும், 4,039 மதுக்கூட உதவியாளர்களும் ஒப்பந்த/தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு முறையே, ரூ.500, ரூ.400 மற்றும் ரூ.300 மாத ஊதிய உயர்வு செப்டம்பர், 2011 முதல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டு அதன்படி அவர்கள் உயர்த்தப்பட்ட ஊதியம் பெற்றும் வருகிறார்கள். இந்த ஆண்டும் மீண்டும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். விற்பனையாளர்கள் மற்றும் மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு முறையே ரூ.400 மற்றும் ரூ.300 உயர்த்தப்படும். மேற்குறிப்பிட்ட ஊதிய உயர்வுகள் சென்ற ஆண்டைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள 28,650 தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவரும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.14.16 கோடி கூடுதலாக செலவிடப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லைறை விற்பனைக் கடைகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த பறக்கும் படைகள் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் இயங்கும். இதற்காக ஆட்சியர் நிலையில் 5 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தமிழ்நாடு முழுவதும் 41 மதுபானக் கிடங்குகளை நிர்வகித்து வருகிறது. இவற்றில் 25 கிடங்குகள் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. எஞ்சிய 16 கிடங்குகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றுள் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசையிலும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திலும், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலும் புதிய கிடங்குகள் கட்ட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இம்மூன்று கிடங்குகளைக் கட்டுவதற்கு ரூ.8 கோடி செலவிடப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான விற்பனைக் கடைகளில் பற்றுச் சீட்டுகள் கையினால் எழுதப்பட்டு வழங்கப்படுவதினால் ஏற்படும் தாமதம் மற்றும் தவறுகளைத் தவிர்க்கும் நோக்கத்தோடும், சரக்கு இருப்பு, விற்பனை சம்பந்தமான கணக்குகளை எளிதாக பராமரிப்பதற்கும், திடீர்த் தணிக்கைக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு பற்றுச் சீட்டு இயந்திரங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். முதற்கட்டமாக 2500 கடைகளும் இந்த இயந்திரங்கள் வழங்கப்படும். 2500 பற்றுச் சீட்டு இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு 5 கோடி செலவிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.