முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீனத்தை விட்டுவெளியேற மாட்டேன் - நித்யானந்தா

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 15 -  மதுரை ஆதீனத்தைவிட்டு வெளியேறமாட்டேன் என்று நித்யானந்தா கூறினார். மதுரை ஆதீன மடத்தில் தியான சொற்பொழிவு ஆற்றிய நித்யானந்தா நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னை எதிர்த்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதீனத்தை மீட்போம் என கூறுகிறார்கள் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்னை எதிர்ப்பாவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  அதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நடவடிக்கை எடுப்பார். காஞ்சி ஜெயேந்திரர் என்னை பற்றியும். மதுரை ஆதீன மடம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக தகவல் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக காஞ்சிமடத்தில் இருந்து அவரது உதவியாளரை அனுப்பிவைப்பதாகவும் கூறி இருக்கிறார். ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்து உள்ளது. அவர்களது தனிப்பட்ட பிரச்சினை. எனக்கும், அதற்கும் தொடர்பு இல்லை. ஜெயேந்திரர் மீதான வழக்கை திரும்பபெறுவது குறித்து ரஞ்சிதாதான் முடிவு செய்யவேண்டும். மதுரை ஆதீனமாக என்னை நியமித்தற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நாங்கள் சந்திப்போம் எதிப்பாளர்கள் என் மீது எழுப்பும்  விமர்சனங்கள் கேலிக்கூத்தானது. நான் ஆணும்அல்ல. பெண்ணும் அல்ல. ஆன்மிகமானவன். எனவே மதுரை ஆதீன மடத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்.  இ ப்போது என்னை எதிப்பவர்கள் விரைவில் எனக்கு ஆதராவாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்