முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் பிரேமலதா பேச்சு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.- 30 - அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்று தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசினார். 

திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க. பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசியதாவது,  தேர்தலில் நின்று வெற்றி பெறுவது மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான். ஆனால் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் தி.மு.க.வினர் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்துவதாக தெரிகிறது. ஜனநாயகத்தை காக்க எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டனர். காந்தியின் படம் பொறித்த நோட்டுக்களை கொடுத்து ஓட்டுக்களை பெற நினைக்கின்றனர் தி.மு.க.வினர். தற்போது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை, கொள்ளை பெருகி விட்டது. 

மின்வெட்டு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்றவே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது. இந்த கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றியடையும் கூட்டணியாகும். தி.மு.க. என்றால் தில்லுமுல்லு கட்சி என்று சொல்லலாம். எங்களது கூட்டணி வெற்றி பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், எம்.ஜி.ஆரை மானசீக குருவாக கொண்ட விஜயகாந்த், அவர் உருவாக்கிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 

இக்கூட்டணி சேரவில்லை என்றால் கடந்த தேர்தலை போன்று ஓட்டுக்கள் பிரிந்து விடும். அதன் மூலம் மீண்டும் தீயசக்தி வெற்றி பெற்று விடும். அதன்பிறகு தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. எங்களது கூட்டணி லட்சியமே தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து மக்கள் ஓட்டளித்தால் அக்கூட்டணி தோற்கும். தமிழகத்தில் பீர்ருக்கும், சோறுக்கும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது தி.மு.க. அதை முறியடிக்க வேண்டும் வகையில் அ.தி.மு.க. தே.மு.தி.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தி.மு.க. ஆட்சியை நாட்டை விட்டே விரட்டும் ஓட்டாக இருக்கும். தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியாத என கருணாநிதிக்கு தெரிந்து விட்டது. 

அதனால்தான் கூட்டணி ஆட்சி என புலம்பி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்பாவி தமிழ் மக்கள் இலங்கையில் படுகொலைக்கு ஆளானதற்கு கருணாநிதிதான் மூல காரணம். தி.மு.க எம்.பி. ரித்தீஷ் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து ஓட்டுக்கு பணம் கொடுக்க சென்றார். அதை அ.தி.மு.க, தே.மு.தி.க.வினர் தடுத்தனர். ஒரு எம்.பி. செய்யும் செயல் அல்ல, இது. தி.மு.க ஆட்சி என்றாலே ரவுடியிசம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களின் விரல்களில் கரும்புள்ளி வைத்து தி.மு.க.வினர் பெரும்புள்ளிகளாகி விட்டனர். இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்