முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர், பிரதமர் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்கள்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.30 - அனைத்து முதல்வர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் கூறினார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து வடசென்னை அ.தி.மு.க. சார்பில் கொருக்குப்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் அருகே அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், வடசென்னை  வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல்  எம்.எல்.ஏ, ஜே.சி.டி பிரபாகர் எம்.எல்.ஏ ஆகியோரது முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேசியதாவது:-

மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்கிற எண்ணத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் இதற்கு மூல காரணமாக உள்ள மத்திய அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆனால் மத்திய அரசில் அங்கம் வசிக்கும் தி.மு.க.வும் ஆர்ப்பாட்டம் நடத்துமாம்.  கூட்டணியிலுள்ள நீங்கள் (தி.மு.க.) ஏன் நேரடியாக பெட்ரோல் விலை குறைக்க வேண்டும் அல்லது  ரத்து செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. தைரியம் இல்லாத தி.மு.க. கருணாநிதியின் மூலம் கபடநாடகம் நடத்த தயாராகி வருகிறார்கள் இதை நாட்டு மக்கள் யாரும் நம்பமாட்டார்கள்.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமே மத்திய அரசு தான். ஆனால் எதுவுமே  தெரியாததுபோல பொருளாதார வீழ்ச்சியால்தான் பெட்ரோல் விலை ஏற்றம் என்று கூறி வருகிறது. 

தமிழ்நாட்டின் நிர்வாகத்திறனை பாராட்டும் மற்ற மாநில முதலமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாக திறமையை பாராட்டியும், அவரே பாரத பிரதமராக வரவேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார்கள். வரலாறு காணாத வகையில் இப்போது ஏற்றியுள்ள விலைவாசி  மக்களை மிகவும் வேதனைக் குள்ளாகியுள்ளது.  மக்களின் நிலைமையை அறிந்துதான் டீசல் விலையை உயர்த்த கூடாது என்று போராடி வருகிறோம். 

இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வீரன் எம்.சி, டாக்டர் காளிதாஸ், சரவணன் எம்.சி, பாஸ்கர் எம்.சி, சுப்புலட்சுமி எம்.சி, சசிரேகா எம்.சி, தாடி ம.இராசு எம்.சி, ரமேஷ் எம்.சி, நாகமுனியரசு, சுப்பரமணி,  வில்லிவாக்கம் பகுதி செயலாளர் கே.பாலன், டாக்டர் புகழேந்தி இளம் தென்றல் சுரேஷ் ராஜா,  முருகன் சாய்பாபா, கொளத்தூர் சதிஷ்பாபு கொளத்தூர் மகேஷ், திரு.வி.க.நகர், கார்த்திகேயன், திருமங்கலம் காளிதாஸ், வட்டசெயலாளர் ராயப்பன், ஆட்டோ ரவி, லில்லி கல்பணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்