முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ரோசய்யாவுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.30 - ஆந்திர மாநில முதல் மந்திரியாக இருந்த ரோசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் முதல்வராக இருந்தபோது ஆந்திரா எல்லையில் உள்ள நக்சலைட்டுக்களை ஒடுக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். இதனால் நக்சலைட்டுகள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தமிழக கவர்னராக ரோசய்யா பதவி ஏற்ற பிறகும் கூட நக்சல்கள் அவர் மீதான வெறுப்பை கைவிட வில்லை என்று தெரிகிறது. ரோசய்யா உயிருக்கு நக்சல்கள் குறிவைத்துள்ளதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து மத்திய உளவுத்துறை மூத்த அதிகாரி கூறும்போது, ``ரோசய்யா உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க தகவல் அனுப்பி உள்ளோம்'' என்றார்.

நக்சல்கள் அச்சுறுத்தல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக போலீசாரும் ரோசய்யாவுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். மேலும் ரோசய்யா சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு கவர்னர் என்ற முறையில் இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இனி கவர்னர் ரோசய்யாவுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்