முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்காக விளையாடியது பெருமை: தோனி

வியாழக்கிழமை, 31 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொடைக்கானல், மே. 31 - ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன் என்று அந்த அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் கோடை கிளப்பின் 125 -வது ஆண்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி விழா மலரை வெளியிட்டு பேசினார். அப் போது அவர் கூறியதாவது - 

சமீபத்தில் முடிவடைந்த 5-வது ஐ.பி. எல். போட்டியில் சென்னை அணிக் காக விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். இறுதிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். 

ஆனால் தோல்வி அடைந்தது எதிர்பா ராதது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் சீனிவாசன் வியாபார விஷயமாக கொடைக்கானல் செல்கிறார் என கருதினேன். 

ஆனால் அவர் இங்குள்ள இயற்கையை ரசிக்க வருகிறார் என்பதை பின்பு அறிந்து கொண்டேன். எனக்கு 2008 -ம் ஆண்டு தான் கொடைக்கானல் பற்றி தெரியும். 

அதன் பின்பு இப்போது தான் இங்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. மற்ற சுற்றுலா தளங்கள் வர்த்தக இட மாக மாறி வருகின்றன. 

கொடைக்கானலில் இயற்கை ரம்யமா   க உள்ளது. இதனை பராமரிப்பதுடன் சுற்று சூழலையும் பாதுகாக்க வேண்டும். வீட்டை எப்படி பாதுகாக்கிறோ மோ அது போல கொடைக்கானல் இயற்கையை பாதுகாக்க வேண்டும். 

சட்டவிதிகளுக்கு உட்பட்டு கொடைக் கானலில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். கோடை கிளப்பின் 125 -வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்