எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11-ம் தேதி துவங்கியது. 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல் ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.
7வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின. இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் டை பிரேக்கிங் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் அளிக்கப்படும்.
ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 வது நகர்த்தலில் டிரா ஆனது. ரேபிட் முறையின் இரண்டாவது ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில் அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 11/2 என்ற கணக்கில் கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா பாராட்டு: 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசுவநாதன் ஆனந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பரபரப்பு நிறைந்த அதிவேக ராபிட் சுற்று டை பிரேக்கர் போட்டிக்கு பிறகு உங்கள் திறமையை நிரூபித்து இந்த பட்டத்தை nullநீங்கள் வென்றிருக்கிறீர்கள். இதன் மூலம் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு nullநீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.
இந்த மகத்தான வெற்றிக்காக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த பட்டத்தை nullங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள் குவிகிறது: உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களது இந்த மிகப்பெரிய சாதனையின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆனந்த் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நம் நாடும், நாட்டு மக்களும் பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து பல சாதனைகள் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய்மக்கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஆனந்த் இந்த நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர். அவர் மீண்டும் தனது சாதனையை நிலை நிறுத்தி இருக்கிறார் என்றார்.
ஆனந்த்தின் சிறந்த முயற்சியால் இந்த சாதனை படைக்க முடிந்ததாக இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா வாழ்த்தியுள்ளார். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் சூர்ய சேகர் கங்குலி கூறுகையில், 180 நாடுகள் பங்கேற்கும் செஸ் விளையாட்டில் ரஷியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதை ஆனந்த் முறியடித்து விளையாட்டு உலகின் முடிசூடா மன்னாக திகழ்கிறார் என்றார்.
ஆனந்த்துக்கு பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக சாதனை படைத்த ஆனந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய செஸ் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, தெண்டுல்கர் வரவால் கிரிக்கெட் தான் இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டாக இருக்கிறது. அதே சமயம் ஆனந்த் உலக அளவில் நம் நாட்டின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். ஆனந்த் 5 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் அவரது சாதனையால் இந்தியர்ளாகிய நாம் பெருமைப்படுகிறோம். தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் பாரத ரத்னா விருதுக்கு ஆனந்த் தான் தகுதியானவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.