முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் செல்லூர் ராஜூ பிரசாரம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 30 - அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் கிடைக்கும் என்று மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூ தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். துவரிமான் பகுதியில் செல்லூர் ராஜூ ஓட்டு சேகரித்தார். வீதி,வீதியாக நடந்து சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து செல்லூர் ராஜூ இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்ககேட்டுகொண்டார்.

அங்கு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் வேட்பாளர் செல்லூர் ராஜூ பேசியதாவது;

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும். விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும். அனைத்து பகுதிகளிலும் தடை இல்லாத மின்சாரம் கிடைக்கும். தி.மு.க.ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுள்ளனர். உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.  உங்கள் வாக்குகளை மொத்தமாக வாக்குகளை மொத்தமாக அ.தி.மு.க.வுக்கு தாருங்கள். 

அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும். மாணவ -மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர், அனைவருக்கும் 20 கிலோ அரிசி கிடைக்கும்.

பெண்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே மக்களாட்சி மலர அ.தி.மு.க.வுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார். 

வேட்பாளருடன் முன்னாள் எம்.பி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சாலைமுத்து, பொருளாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், பாகச்செயலாளர்கள் மரக்கடை கண்ணன்,யுகாராஜா, செல்லூர் பாஸ்கரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உடன் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்