முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.1 ​- தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. இதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடைகள், நோட்டுகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. மாணவ, மாணவிகள் புத்தக பையுடன் புதிய சீருடை அணிந்து இன்று பள்ளிக்கு செல்வார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஜூன் 4ம் தேதியும், சிபிஎஸ்இ பள்ளிகள் 18ம் தேதியும் திறக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்