முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துகளில் 2 பேர் பலி: முதல்வர் நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - தமிழகத்தில் இருவேறு சாலை விபத்துகளில் பலியான இருவரது குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

சென்னை, மயிலாப்nullரைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் செல்வன் ஆதித்யா 29.5.2012 அன்று  இராமகிருஷ்ணமடம் சாலையில் நடந்து சென்ற போது, அரசு மாநகரப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தான் என்ற  செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மாத்தூர் கிராமம்,  திருச்சிராப்பள்ளி ​ புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 30.5.2012 அன்று புதுக்கோட்டையிலிருந்து, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து,  இரு சக்கர வாகனம் ஒன்றின் மோதியதில்,  இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மாத்தூர் கிராமம், தென்னம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த  சண்முகம் என்பவரின் மகன் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இவ்விரு சாலை விபத்துக்களிலும் அகால மரணமடைந்த ஆதித்யா மற்றும் சக்திவேல் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான செல்வன் ஆதித்யா மற்றும் சக்திவேல் ஆகியோரின்  குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.         

இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்